|
|
| வரிசை 1: |
வரிசை 1: |
| − | * | + | *<br>தமிழ்த் தாத்தா உ.வே.சா.அவர்களின் நினைவு மஞ்சரி முதற்பாகம் |
| | + | *1. கடல் கடந்து வந்த தமிழ் |
| | + | *சீவக சிந்தாமணியை நான் முதன்முதல் 1887-ம் வருஷம் பதிப்பித்தபோது தமிழிலக்கியங்களில் அபிமானமுடையவர்கள் பலருடைய அன்பும் ஆதரவும் எனக்குக் கிடைக்கலாயின. எதிர்பாராத இடங்களிலிருந்து வாழ்த்துரைகள் பல வந்தன. தமிழுலகத்தில் அந்த் அநூல் உண்டாக்கிய இன்பக் கிளர்ச்சிக்கு அடையாலமாகப் பல கடிதங்கள் என்னிடம் உள்ளன. அதனால் எனக்குத் தமிழ்நூலாராய்ச்சியில் தீவிரமான ஊக்கம் உண்டாயிற்று. |
| | + | *அயல்நாட்டிலிருந்து 1891-ம் வருஷம் ஏப்ரில் மாதத்தில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் பாரிஸ் என்ற முத்திரை இருந்தது. அதன் மேல்விலாசம் தமிழிலும் இங்கிலீஷிலும் எழுதப் பட்டிருந்தது. பாரிஸிலிருந்து தமிழெழுத்து வந்தது என்றால் யாருக்குத் தான் இயப்பு உண்டாகாது? அந்தக் கடிதத்தை ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். கடிதம் முழுவதும் தமிழாக இருந்தது; எனக்கு மேலும் ஆச்சரியம் உண்டாயிற்று. கடிதத்தின் தலைப்பில் ஒரு புதிய செய்யுள் இருந்தது; அதைப் பார்த்தபோது எனக்கு உண்டான ஆச்சரியம் அளவு கடந்தது. அக்கடிதம் வருமாறு;- |
| | + | *SOCIETE HISTORIQUE<br>CERCLE St.SIMON Paris la April 3d 1891. |
| | + | *மஹாஸ்ரீ சாமிநாதையரென்னும் பெரும்புகழ் பொருந்திய தமிழாசிரியராம் மகா சிறப்பிற் புலவர் தமக்கு நாம் பாரிசு மாநகரத்தில் தமிழாசிரியர் எழுதுபவையாவன;- |
| | + | *"சிந்தாமணியாஞ் சிறப்புடைய காப்பியமே<br>பொன்றாதின் மாலை பொருந்திவரக் - கண்டேன்<br>சிலப்பதிகாரமுதற் சீர் நூல்கள் நான்கு<br>மளித்தலா மென்ம ரறைந்து." |
| | + | *நீர் 1887-ம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்த சிந்தாமணியைக் கண்டு மிகவு மதிசயமா யிருந்தோமென்ரும் நீர் செய்த உலகோருக்குப் பெரியவுபகார மறிந்தோமென்றும் இன்னம் பழைய புத்தகங்களச்சிற் பதிப்பித்தற்குரியவாயுண்டென்றும் உமக்கு நாமெழுதவேண்டுமென்றென்னிக்கொண்டு வருகிறோமாதலால் மிகவும் களி கூர்ந்து வாழ்வோ மெப்போதென்றால் சிலப்பதிகாரம், மணிமேகலை குண்டலகேசி வளையாபதி யென்னும் வேறு நாற்பெருங் காப்பியங்கள் பரிசோதித்துக் கொடுத்த வப்போதே சொல்லுவோம். |
| | + | *சிலப்பதிகாரமோ வென்றால் சென்னப்பட்டணத்தில் முன் 1885-ஆம் வருஷத்தில் அதின் முதற்காண்டம் உரையின்றிக் கொடுத்தார்களென்றறிகின்றோமானாலிரண்டாமும் மூன்றாமும் தருகவென்று பல விசேடமா யறவிய மனத்தரெல்லாருங்கேட்போர். |
| | + | *மணிமேகலையோவென்றால் நங்கட்கண் ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனாலந்தப் பிரதியெழுதியவன் பழையவெழுத்துக்கள றியாதபடியினாலே சில கவிகளும் வார்த்தைகளுமெழுதாமல் விடான். ஆதலினாலந்தப் பிரதி படித்தற்குரியதல்லது. |
| | + | *சிறப்புப் பொருந்திய நூலவைகளச்சிற் பதிப்பித்தலைன்றி விட்டாற் கையெழுத்துப் பிரதிகளடைக்கலாமோ வென்று கேட்கிறோம். இங்குதான் பாரிசு மாநகரத்தில் printiing type உண்டு. இதுவுமல்லாமல் French பாடைக்குத் திருப்பி யாவர்க்கும் பயன்செய்ய அளிக்கக் கூடுமென்று முமக்கு நாமெழுதுகின்றோம். |
| | + | *எம்முடைய புன்றமிழை உம்முடைய தயையினாலேயே வாசித்துக்கொண்டால் ஒரு காகிதமெமக்கு மறுபடியனுப்பினால் மிகவும் சந்தோடமாயிருப்போம். |
| | + | *சுவாமியுடைய கிருபையெல்லாம் உம்மேல் வருகவென்று உங்கள் colleague and servant ஆயிருக்கிறோம். |
| | + | *Prof. J. Vinson. |
| | + | *பிரான்சு தேசத்தில் உள்ள ஒருவரிடம் தமிழன்பு எவ்வளவு ஊறியுள்ளதென்பதை அக்கடிதம் நன்றாக வெளிக்காட்டியது. அவர் சீவக சிந்தாமணியைப் படித்து மிக்க இன்பத்தை அடைந்திருந்தார். அதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்னும் நான்கும் வெளிவந்தால்தான் பூரணமான திருப்தி உண்டாகுமென்று அக்கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார். |
| | + | *அதனை எழுதிய ஜூலியன் வின்ஸோனென்பவரை முன்பு நான் அறியேன். அவராக வலிந்து பாராட்டி எழுதினார். அவருடைய கடிஅதத்தில் உள்ள அன்புரைகள் என் உள்ளத்தைக் குளிர்வித்தன. பாரிஸிலும் தமிழ்ச் சுவடிகள் உள்ளன என்பதை அதிற் கண்டேன். உடனே அவருடைய கடிதத்திற்குப் பதில் எழுதினேன். அந்நகரத்தில் என்ன என்ன ஏட்டுச் சுவடிகள் உண்டென்று விசாரித்திருந்தேன். அவர் எவ்வாறு தமிழ் படித்தாரென்பதையும் எழுதும்படி வேண்டினேன். |
| | + | *அவர் எழுதிய மற்றொரு கடிதத்தால் பாரிஸ் நகரத்திலுள்ள பெரிய புத்தகசாலையில் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகள் ஆயிரம் இருப்பதாகத் தெரிய வந்தது. தமிழானது கடல் கடந்து சென்று அங்கும் அன்பர்களைப் பெற்றிருப்பதை நினைந்து மகிழ்ச்சியுற்றேன். |