வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தாகூர் உ.வே.சா மீது எழுதிய வங்காளிக் கவிதை

From மரபு விக்கி

Jump to: navigation, search
வங்காளி மூலம்

ஆதிஜூகேர்  ஆந்தாரே  தாலபத்ரே  ச்சிலோ 
த்ராவிட  தேசேர்  புராதன  கீர்த்தி, 
ஸேஇ  மஹத்நிதி,  ஹே  தேசிகோத்தம 
தோமார்  த்வாரா நா  கி  பாஹிர்ஹயில்? 
ஸே   காலேர்  அகஸ்த்யேர்  மதஏஸே  தோமார்மாகே
ஸிம்ஹாஸனே  ரேகே  திலே  நாகிதுமிஸ  ஸம்மானே?

ஆர்  பாஞ்ச  மஹா  காவ்யேர்  மாஜ்ஜே 
சிந்தாமணி,  நூபுரகாதா,  மணிமேகலா  இத்யாதி 
ஸம்சோதன  கரே  தாஹார்  பத   ஜூகலே 
ஸமர்ப்பணகரிலே  நா  கிதுமி? 
ஸங்கே  ஸங்கே  ஸங்ககால  ஸாஹித்யகே 
ஜ்யோத்ஸ்னாய்  ஃபுடித  நித்ய  மல்லிகார்மத 
சோபித  கரிலே  நாகிதுமி?  தேமாகரிப்ரணாம்


தமிழாக்கம்

"ஆதி(முந்தைய) யுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளில் இருந்தது திராவிட நாட்டின் புராதன (பழைய) கீர்த்தி - அந்தப் பெருநிதி, பேராசானே உன்னால் அன்றோ வெளிப்பட்டது? அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து  உன் அன்னையினைச் சிம்மாசனத்தில் பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்? அம்மட்டோ ஐம்பெருங் காப்பியங்களுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை முதலானவற்றை (ஆய்ந்து பதிப்பித்து) அந்த அன்னையின் இணையடியில் சமர்ப்பித்தவன் நீ அன்றோ? அவற்றுடன் சங்க இலக்கியத்தையும் நிலவில் மலர்ந்த

முல்லை என ஒளிர வைத்தவனும் நீஅன்றோ? உன்னை வணங்கு கிறேன்." 
த.நா.சேனாபதி 
(மஞ்சரி முன்னாள் ஆசிரியர்) 


சுப்பிரமணிய பாரதியார் ரவீந்திர நாத் தாகூர் ஆகிய இரு மகாகவிகளும் ஐயரவர்கள் அகத்திய முனிவருக்கு ஒப்பானவர் என்று பாராட்டியது குறிப்பிடத் தக்கது.

Contributors

Themozhi

This page was last modified on 18 February 2016, at 04:40. This page has been accessed 1,271 times.