|
காவிரி கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது; கொள்ளிடம் வைணவ மரபில் ’வட திருக்காவேரி’ என்று பெயர் பெறுகிறது. இந்த இடைக்குறையின் மறுபெயர் ”திருவரங்கம்”. ’வண்டினமுரலும் சோலை, மயிலினமாலும் சோலை’ என்றபடி இயற்கை எழில் மலிந்து தோன்றும் இத்தீவின் நடுவில் திருப்பொலிய நிற்பதுதான் ‘அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில்’ என்னும் நம் பெருமாள் இனிதுறையும் ‘பெரிய கோயில்’
இத்தலம் புராணம் போற்றும் பெருமை பெற்றது; ஆழ்வார்கள் அனைவராலும் மங்களாசாஸநம் செய்யப் பெற்றது. (மங்களம் - நற்பேறு,மேன்மை,வளம்)
இங்கு திருநந்தவனம் அமைத்துத் தொண்டு செய்த விப்ர நாராயணர் அரங்கம் தவிர்ந்த வேறு திவ்ய தேசங்களைப் பாடவில்லை. திருமங்கை ஆழ்வார் திருமதிளமைத்தபோது அந்த நந்தவனத்தைச் சுற்றிலும் மதிள் அமைத்தார்; இவர் 73 பாசுரங்கள் செய்துள்ளார். கம்ப ராமாயணம் அரங்கேறியது இவ்வாலயத்தில்தான். நெடிய வரலாறு கொண்ட இத்தலம் மஹாபுருஷர்கள் பலரின் தல யாத்திரையில் இடம் பெறுவது. ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு சாதுர்யஸ்ய நோன்பு மேற்கொண்ட இடத்தை இங்கு இன்றும் பார்க்கலாம்.
சேர,சோழ,பாண்டிய,ஹொய்சள,நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்; மஹா ப்ரபுக்கள் கொடுத்த விலை உயர்ந்த அணிமணிகளை ஏற்றுக்கொண்ட அரங்கன், எளிய அடியார்கள் உஞ்சவ்ருத்தி மூலம் ஈட்டிய வருவாயில் செய்து ஸமர்ப்பித்த ஆபரணங்களையும் அணிந்துகொண்டு அருள் செய்கிறான்.
வைகாநஸ வழிபாட்டு முறையில் இருந்த இந்த ஆலயத்தில் உடையவர் ஸ்ரீபாஞ்சராத்ர முறையை நிறுவினார்; பாரமேச்வர ஸம்ஹிதை முழுக்கட்டுரை...
|