நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 3மரபு விக்கி இருந்துமுனைவர்.க.சுபாஷிணி தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன். இந்த நூலில் மூன்றாவது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.கி.ஸ்ரீதரன் அவர்களின் “ மாங்குடி அகழ்வாய்வில் கிடைத்த படகுக் குறியீடு பொறித்த பானை ஓடுகள்” என்ற கட்டுரை.
அதில் கி.மு.2ம் நூ. சேர்ந்த தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு குறிப்பிடத்தக்கது அதோடு படகு போன்ற வடிவம் பொறிக்கப்பட்ட பானையும் இங்கே கிடைத்துள்ளது. இப்பானையின் கழுத்துப் பகுதியில் படகு வடிவம் கீறப்பட்டுள்ளது. ஒரு படகு துடுப்புடன் இருப்பது போன்ற வடிவில் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த மாங்குடி எனும் சிற்றூர் சங்ககாலத்தில் வணிக வழித்தடத்தில் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆகையால் வணிகர்கள் வந்து சென்றமையைக் குறிக்கும் அகழ்வாய்வுப் பொருட்கள் பல இங்கு கிடைப்பது, இப்பகுதி சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் வணிகர்கள் வந்து சென்ற இடமாகும் என்பதற்குச் சான்றாக அமைகின்றது என்பதை இக்கட்டுரை அகழ்வாய்வுத் தகவல்களோடு முன் வைக்கின்றது. மாங்குடி மட்டுமன்றி மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் தொடர்ச்சியாக அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் மேலும் பல தொல்லியல் மற்றும் கடசார் ஆய்வுச்சான்றுகள் நமக்குக் கிட்ட பெரிய வாய்ப்புள்ளது. --Ksubashini (பேச்சு) 10:25, 7 மார்ச் 2017 (GMT) |