இது திருமணத்தில் தாலி கட்டிய பின்னர் மணமகளும் மணமகனும் சேர்ந்து செய்யும் சடங்கிலே எடுக்கப் பட்ட புகைப்படம். இதோடு சேர்ந்த இன்னொரு படத்தை நாளை சேர்க்கிறேன். இன்னிக்குச் சரியா வரலை. மணமகள் அருகே அமர்ந்திருக்கும் சிறுமிகள் அனைவரும் இன்று திருமணமாகி அவங்க அவங்க வாழ்க்கையிலே செட்டில் ஆகிவிட்டார்கள். கல்யாணப் பெண்ணை யார்னு கண்டு பிடிக்கிறவங்களுக்கு இங்கே வந்து பார்க்கச் சுட்டி தனி மடலில். :D

அதே பெண், அதே மாப்பிள்ளை. அப்போதெல்லாம், (எங்க வீடுகளில் இப்போவும் தான்) திருமணம் முடிந்து மாலைதான் வரவேற்பு நிகழ்ச்சி. திருமண மந்திரங்களிலும் சடங்குகளிலும் களைத்திருக்கும் மணமக்கள் இந்த வரவேற்புக்கு உட்காருவது இப்போ மாதிரி இரவு எட்டு மணிக்கெல்லாம் இல்லை. மாலை ஐந்து மணிக்கே. நலுங்கு முடிந்து உடனே வரவேற்புக்குத் தயாராகணும். அதுக்கப்புறம் இரவு சடங்குகள் இருக்கின்றன. இப்போ மாதிரிக் காலம்பரவே புரோகிதர் அருந்ததியைக் காட்டிட்டு ஓட மாட்டார். இரவு சடங்கின் போது வெளியே அழைத்துச் சென்று விண்ணில் சப்த ரிஷி மண்டலத்தையும், அவற்றினுள் வசிஷ்டருக்கு அருகே மட்டும் காணப்படும் அருந்ததியைக் காட்டி அது தெரிகிறதா? என்று நிச்சயம் செய்து கொண்டே மற்றச் சடங்குகள் செய்ய உள்ளே வர முடியும். இங்கே மணப்பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் குளிர்பானம் எடுத்து வருவது மணமகளின் தம்பி. மற்றப் படங்களையும் வலை ஏற்றினதும் இந்தப் பக்கம் நிறைவடையும். நன்றி.
--Geetha Sambasivam 09:12, 15 டிசம்பர் 2010 (UTC)