அன்றொருநாள்: ஆகஸ்ட் 03 & 25 & 31:1மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:43, 1 செப்டெம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் இன்னம்பூரான்
இன்று ஸுபாஷிணி ஸ்பெஷல். அவருடைய தாயகமாகிய மலேஷியா விடுதலை அடைந்த தினம். ஒரு ஒப்புமை நோக்கில் பார்த்தால், இந்திய/மலேஷிய தேசாபிமான ஒற்றுமைகளும், வேற்றுமைகளும், அவற்றின் தாக்கங்களும், காலச்சுவடுகளும் வியப்புக்குறிய வரலாற்று உண்மைகளை புலப்படுத்தலாம். அதனால், மின் தமிழர்களிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். ‘அன்றொருநாள்: ஆகஸ்ட் 03’ இழையை, பின்னூட்டங்களுடன், ஒரு முறை படித்து விடுங்கள். அன்றைய இழைக்கு அவரும், விஜயராகவனும் பட்டை தீட்டியிருக்கிறார்கள். உடனடி உதவிக்கு, அவர்கள் அளித்த உசாத்துணைகளையும், இங்கு பதிவு செய்துள்ளேன். விஜயராகவன் விஷயதானம் செய்தார், ஸுபாஷிணியின் உவகை மதுரை மல்லிகை போல் மணந்தது. தேசாபிமானம் ஓடுகிறதல்லவா, இரத்தத்துடன் கலந்து. அதை பிரமேயமாக வைத்துக்கொண்டு துவங்குகிறது இன்றைய ‘அன்றைய தினம்’. ஒரு தத்துவஞானி கூறினர், ஆகஸ்ட் 25, 1950 அன்று சிங்கப்பூரில்:
ஆகஸ்ட் 30, 1957 அன்று இரவு 11:58: பிரதமராகப்போகும் துங்கு அப்துல் ரஹ்மான் ராயல் ஸெலங்கோர் கிளப் படங்க் ~கோலாலம்பூருக்கு வருகை. ஜனசமுத்திரம். அலையன்ஸ் கட்சி யுவர்கள் அணி, அணியாக; இரு நிமிட இருள்; நடு நிசி; எங்கும் பகல் போல் வெளிச்சம். யூனியன் ஜாக் கொடி சம்பிரதாயமாக இறக்கப்பட்டது. எல்லோரும் ‘நெகரகு’ என்ற தேசீய கீதம் பாட, மலேயாவின் புதிய கொடி ‘பட்டொளி வீசி பறந்தது’. கூட்டத்தின் கோரஸ் முழக்கம் ஏழு முறை: ‘மெர்டெகா’. ஒளி என திகழ்ந்த பிரதமர் , ‘இந்த நன்னாள் மலேயாவின் மக்களின் வாழ்விலே இன்பத்திருவிழா’ என்று வாழ்த்தி சொற்பொழிவாற்றினார். ஆகஸ்ட் 31 காலையில் மெர்டெகா ஸ்டேடியத்தில் 20 ஆயிரம் மக்கள் கூடினர். இங்கிலாந்து மஹாராணியின் ஆணை படி வந்திருந்த கிளெவ்செஸ்டர் பிரபு விடுதலை நீட்டோலையை பிரதமரிடம் நீட்ட, அவரும் விடுதலை பிரகடனத்தை அறை கூவினார். கூட்டத்தின் கோரஸ் முழக்கம் ஏழு முறை: ‘மெர்டெகா’. காதில் விழுகிறது, இன்று எனக்கு. உமக்கு? எல்லோரும் ‘நெகரகு’ என்ற தேசீய கீதம் பாட, மலேயாவின் பழகிய கொடி உயர பறந்து அசைந்தாட, மக்களும் நடனமாடினர். பின்னர், இஸ்லாமிய தொழுகைக்காக ஒரு இசைக்குரல் அழைக்க, இறை வந்தனம் அளிக்கப்பட்டது.
இன்னம்பூரான் 31 08 2011 http://3.bp.blogspot.com/_BFUviP-FYqE/TIJPm2CHi6I/AAAAAAAAAA0/JlTG0X7fBTE/s1600/scan0014.jpg
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:43, 1 செப்டெம்பர் 2012 (UTC)
|