|
புரிதல் -- செய்தல்; செய்கை என்பதனோடு சம்பந்தமுள்ள விதத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகிறது.
understanding என்பது மனோகாரியம். மனத்தினால் செய்யும் செயல்.
இதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாமா? ஏதோ எதேச்சையாகத் தற்காலத் தமிழில் இந்த விதமான பயன்பாடு வந்துவிட்டது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதற்கு ஏதேனும் ஆதரிக்கும் விதமாக இலக்கியப் பயன்பாடு இருக்கிறதா?
என்றால்
உண்டு என்பதே விடை. புரிதல் என்ற வினைச்சொல் புறச்செய்கை என்பதற்கு மட்டும் பயன்படுத்தப் படாமல், மனத்தின் செயலான விருப்பம், தியானம், இறைஞ்சுதல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
உதாரணங்கள் பல என்று சொல்லலாம்படி இருக்கின்றன.
முதல் உதாரணம் --
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.(5)
இங்கே புரிதல் -- விரும்புதல் என்பது முதற்பொருளாகவும், புரிதல் -- எப்பொழுதும் சொல்லுதல் என்பதி இரண்டாவது பொருளாகவும் பரிமேலழகரால் சொல்லப் பட்டிருப்பதை அவர்தம் உரையில் காணலாம்.
புகழ் புரிந்தார் மாட்டு -- இறைவனது மெய்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.
புரிதல் -- எப்பொழுது சொல்லுதல்.
மேலும் வாசிக்க...
|