Sulgi KaNda Sivanமரபு விக்கி இருந்துSulgi's Siva
Recovered from the archives and already included in Google Site on SumeruTamil Text; Sulgi;s Hymn B See
https://sites.google.com/site/sumerutamiltex/sulgi-s-hymn-b/lines-56-81
சூல்கி கண்ட சிவன். முனைவர் கி. லோகநாதன்
சூல்கியின் முதரீபியத்தில் வரும் வரிகள் 73-74 களை ஆழ ஆழ சிந்திக்க உலக சமயங்கள் அனைத்தையும் ஒத்து நோக்கி அவை எவ்வகையில் ஒன்றுபடுகின்றன எவ்வகையில் பேதப்படுகின்றன என்று ஓரளவு தெளிவாக அந்தத் தெளிவின் அடிப்படையில் இந்தக் கட்டுரை. சுமேருத் தமிழில், சுமேரு மக்கள் வளர்த்த சமயத்தில் எழுந்த கருத்துக்களே திரிபுற்று சைவம் வைணவம் சாக்தம் என்றும் கிறித்துவம் இசுலாம் என்றும் இன்னொரு வகையில் புத்தம் வேதாந்தம் என்றெல்லாம் பிளவு பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஒன்றாகிய மூலக் கருத்தை, சுமேருத் தமிழில் புதைந்து கிடப்பதை இந்த உலக சமயங்கள் வரலாற்று சூழல்களுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் அந்தப் பழைய சுத்தசமயத்தையே நிலைநிறுத்த முயன்றிருக்கின்றன என்றும் தெரிகின்றது. அதனை விளக்குவதாகவே இக்கட்டுரை அமைகின்றது. சிபனே சிவன் 74. u-me-da u-ul-li-a-se இங்கு நிச்சயமாக முதல்வரியின் மொழி பெயர்ப்பு தவறானது, இரண்டாவது வரி ஓரளவுப் பொருந்துவது: "உண்மையோடு ஊழி காலம் வரை" என்பதாகக் கொள்ளலாம். இங்கு நிச்சயமாக தமிழ் 'ஊழி' கருத்து இருக்கின்றது. அண்டசராசரம் அனைத்தும் ஊழித்தீயில் அழிந்து முற்றிலும் இல்லாமற் போவதே இங்கு குறிக்கப்படும் காலக் குறிப்பு ஆகும். இது மிக ஆழமான பிரபஞ்சக் கோட்பாட்டினை சூல்கி கொண்டிருந்தான் என்பதைக் காட்டுகின்றது. சைவ சமயத்தில் இதைத் தான் சாதாரண பிரளயங்களுக்கு வேறாக 'மகாப்பிரளயம்" என்பார்கள். ":உண்மையொடு" என்பதை " மெய்யாக" , "அகச் சுத்தத்தோடு மெய் பக்தியின்" என்றெல்லாம் கூறலாம். அடுத்து "su-bi hu-mu-dug" "சூர்பி தூக்கும்மு" என்பது. இங்கு "கரம்குவித்து கும்பிடல்” (su=sur>சூர்> கரம்) சுட்டப்படுகின்றது என்பது தெளிவு. இன்று இந்து மக்களிடையே விளங்கும் பழக்கம் அன்றும் சூல்கியின் மாட்டும் ஆகவே மக்களிடையேயும் விளங்கிற்று என்பது தெளிவாகின்றது. இப்படி அவன் கையெடுத்து ஊழிகாலம் வரை கும்பிட்டுக் கொண்டே இருப்பேன் என்று கூறுவது யாரை? என்று கேள்வி எழ "sipa" என்னும் சிவனைத்தான் என்று தெளிவாகின்றது. ஆனால் யார் இந்த "sipa"? இங்குதான் "sipa ildumm-ma" என்பதை இன்னும் ஆழமாகக் கருத வேண்டும். சுமேருவில் 'il' என்பது ' இயல்' என்றோ 'எழு' என்றோ ஆகும். எவ்வாறு கொண்டாலும் "இயல்தும்ம" அல்லது "எழு(ந்)த்தும்ம" என்றாகிறது. இயல்வது அசைவது எழுவது என்பதற்கெல்லாம் உள்நின்று அவற்றின் சத்தியாக, அந்த உயிர்ப்பிக்கும் அசைவிற்கும் காரணமாக இருப்பது இந்த சிவன் ஆகின்றான். பிற்காலத்தில் இதேப் பெயரில் தமிழில் "நாத தத்துவம் " அதாவது உயிர் மூச்சிற்கு முச்சாக இருக்கும் சத்தி இவ்வாறு விளம்பப்படுகின்றது. எனவே இதனை "நாதசிவன்" என்று பிரித்தறிவோம். பிற்காலத்தில் கிரேக்கர்களால் தொழப்பட்ட தெய்வங்களுள் 'zeus" என்றோர் தெய்வம் உண்டு. இச்சொல்லை "zi-us" என்பதின் திரிபாகக் கொள்ளலாம். அதன் பொருளை "உசிரின் ஜீவன்" என்று கொண்டால் மீண்டும் 'நாத சிவன்" வருவதைக் காண்க. 1. nin-me -sar-ra u-dalla-e-a மை ஜீ மேளம் கூரை காங்க வான் ஊரஸ்ய இங்கு சர்வ சத்திகளின் தலைவியாகிய அம்மை, சீர்மகள் விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தாலும் விரும்பப்படுகின்றவள், ஒளியையே தன் ஆடையாகக் கொண்டிருக்கும் பராபரை ஆண்ணது கிழத்தி என்று விளிக்கப்படுவதைக் காண்க. மேலும் வரலாற்று சிறப்பு மிக்க கீழ் வரும் வரிகளையும் நினைவு கூர்வோம். 14. an-ne me-si-ma nin ur-ra u-a 15.inim-ku-an-na-ta inim-du-du எல்லா சக்திகளின் தலைவியாக விளங்கும் ஈனன்னை, தனக்கென்று எந்த சக்தியும் இல்லாதவள். ஆண் அருளத்தான் இவள் கொற்றவையாக துர்க்கையாக வெல்லாம் திகழ்கின்றாள். இதை அவள் அறியாதவளும் அல்ல. அதனால்தான் ஆண் சொற்பிழையாதே இவள் உலக நாடகத்தை நடாத்துகின்றாள். ஆக இந்த "ஆண்"னிற்கு மேலாக எந்த தெய்வமும் இருக்கமுடியாது, இவனே திருமூலர் விளம்பியவாறு, தானே தனக்குத் தலவனாகிய தற்பரன், தனக்கு தலைவனாக யாரையும் கொண்டவன் அல்லன் தமிழர்களின் ஆண் மாஆடிய புலன் நாஞ்சில் ஆடா இங்கு எட்டாவது வரியில் வரும் 'ஆண்டலை' என்பதே நம் ஆய்விற்கு உரியது. இச்சொல் "ஆண்-தலை" என்பதின் திரிபு, இதற்கு உரையாசிரியர்கள் "ஆண் மகனது தலையை உடைய பறவை" என்று கூறுவது மிகவும் பொருத்தமற்றதாகும், வீணான கற்பனை. அப்படி யென்றால் உண்மைப் பொருள்தான் என்ன? ஆண் என்னும் தெய்வம் தலைப்பட்டு , அதாவது வெளிப்பட்டு நிற்கும் வெப்பமும் கனலும் நிறைந்த கடுநெறி அதாவது வழி என்பதே உண்மையானப் பொருள் என்று கொள்ளவேண்டும். இங்கு இவ்வாறு தலைப்பட்டு நிற்கும் ஆண் சுடலையாடியாகிய உருத்திர சிவன் தான். சுடர் சிறந்து உருத்த ஒள்ளழலாகிய நெருப்பில் ஆடுகின்றவன் வேறு ஆராக இருக்கமுடியும்? சுடலையாடியாக வர்ணிக்கப்படும் உருத்திர சிவன் தானே? காரைக்கால் பேயாரின் கீழ்கண்ட பாடலைக் காணுங்கள். "அனல் ஆடும் எங்கள் அப்பன்" என்று காரைக்கால் பேயாரால் துதிக்கப்படும் சங்கார தாண்டவத்து உருத்திர சிவனே மேற்கூறிய பதிற்றுப்பத்து பாலைக் கௌதமனார் பாட்டிலும் வரும் " ஆண்டலை" யாகும் என்பது வெளிப்படை. தொல்காப்பியத்தில் விடப்பட்ட பாலைதெய்வம் இந்த ஆண்டலையாக இருக்கலாம். பாலைப் பாடி சிறப்புற்ற கௌதமன் பாலை தெய்வத்தை பாடாது இருப்பாரா? ஆயினும் இன்னும் சிந்திக்க "ஆண்" என்னும் பெயர் திருமாலுக்கும் உரியதாக விளங்கிற்று என்று கொள்வதற்கும் இடம் உண்டு. பல பாடல்களில் "அண்ணல்" என்றாலே திருமாலே என்று குறிக்கவும் படுகின்றது. ஆக "ஆண்' என்ற சொல் சங்க காலத்தில் "முழுமுதல் தெய்வம்" "தானே தனக்கு தலைவனாகிய தற்பரம் " என்ற பொருளில் ஓரிடத்தில் உருத்திர சிவனாக பிறிதோர் இடத்தில் திருமாலாக என்றெல்லாம் தலைப்பட்டு வெளிப்பட்டு மக்கள் உணரத் தன்னைக் காட்டியுள்ளது என்றே கொள்ளவேண்டிருக்கின்றது. சூல்கியின் சிவனும் ஆண்ணும் இனி அடுத்த பகுதியில் எவ்வாறு சுத்தசமயம் என்பது இந்த ஆணையே தெய்வமாக் கொண்டது என்றும் பிறகு உலக சமயங்கள் அனைத்தும் எவ்வாறு இந்த சுத்த்சயத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் என்றும் காண்போம்.
|