ஸ்ரீராம நவமி, ராமாயணப்பாடல்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்
ராம ஜெயம் நம் தேகபலம்
ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ராம ஜெயம் நம் ஜீவரசம்-ஸ்ரீ
ராம ஜெயம் நம் ஜீவ ரசம்

சரணங்கள்:-
Arthanareeswarar 5.jpg

ஓதிய நாவில் உணர்ந்தவர் நெஞ்சில்
உலாவிடும் ராமஜெயம்
உள்ளம் நினைத்ததை அள்ளி வழங்கி
உயர்த்திடும் ராம ஜெயம்
சீத இலக்குவன் மாருதி வீடணன்
சீர் பெற்ற ராம ஜெயம்
சித்தி தரும் பதம் சக்தி மயம் சிவம்
சீதா ராம ஜெயம்-ஜெய
சீதா ராம ஜெயம்

ஆழ நெடுங்கடல் சேதுவிலே அணை ஆக்கிய ராம ஜெயம்
ஆங்கொரு கல்லிடைப்பூங்கொடி தோன்ற
அருள் தரும் ராம ஜெயம்
தேடி அடைந்தவன் வாலி நெருப்பும்
சிலீரென்ற ராம ஜெயம்
சித்தி தரும் பதம் சக்தி மயம் சிவம்
சீதா ராம ஜெயம்-ஜெய ச்
சீதா ராம ஜெயம்

இப்போ சுருக்கமா ராமாயணப்பாடல்கள்:

சீர் கொண்ட செந்தமிழ் மதுரமொழி அமரர் பதி
செல்வி இந்திராணி மன்னன்
தேவரோடு வாசவன், எமதர்ம ராசனும்
திக்குப் பாலகனரனந்தர்
சென்று சீர்ச்சிவன் மலர் திருவடிகள்
போற்றியே
தீய ராவணன் இடுக்கண்
Imagesvalmiki.jpg

செப்பவட மேருகிரி தன்னிலே, ஒரு பால்
சென்று ரகசியம் முடித்து,
திருக்கொலு கலைந்தபின் அவரவர்
இருப்பிடம்
சென்றபின் நாரதர்க்கு
திரு உடல் வியர்த்து அவர் வயிறது வெடிக்குமுன்
செப்பினார் புற்றினுள்ளே:
செய்தவ வான் வான்மீகி உள்ளிருந்தோர் காதி
சென்று அந்த உரைகள் வீழ
சிவ சிவா என்றுமே கீர்வாண சுலோகமாய்ச்
செப்பினார் இராம காதை:
சென்று முதல் மூவரில் வைகுந்த வாசனும்
திருவளர் அயோத்தி நகரில்
தெசரதன் தேவி நல் கோசலை வயிற்றினில்
சீராமர் ஆக வந்தார்
சேயிழை சுமித்திரை கைகேயி
இருவர் பால்
சேடனோடு ஆழி சங்கு
சென்று இலக்குவன் பரதன் சத்துருக்கனனெனச்
சேயவர்கள் நால்வர் ஆகச்
சேர்ந்து விளையாடையில் கூனி
உடல் நிமிரவே சிற்று வில்
உண்டை எய்து,
Imagesஅகலிகை.jpg

சீலராகவனுடன் தம்பியும் சென்று விசு
வாமித்திரன் செய்த வேள்வியைச்
சீரழித்திட்டோர் தாடகை தனைக் கொன்று
சிறுமகள் தன்னை ஓட்டி,
செல்வி எனும் அகலிகை கல்லுருத் தீர்ந்திடத்
Seethakalyanam.jpg

திருவடிச் செல்வம் நல்கி
கார் கொண்ட மிதிலையில் சனகன்
இடுசிலையினைக்
கையால் எடுத்து ஒடித்துக் கலியாணம் செய்திடத் தாய் தந்தை முதலான
கணமெல்லாம் வரவழைத்துக்
கன்னியாம் சானகி தன்னை மணம் செய்து
கடுகி வரும் வேளை தன்னில்
கறுத்த முனியாம் பரசு இராமன் எதிர்த்திடக்
கனத்த கோதண்டம் வாங்கி,
கெளசலை தயரதன் முதலான பெரியோர்கள்
களித்திட அயோத்தி வந்து,
கனகமணி முடிசூட முன்னின்ற காலையில்
காய்ந்த பகையால் கூனியும்
கைகேயி இடம் வந்து சூழ்வினை உரைக்க
அவள் கணவனிடம் வரங்கள் வாங்க
காட்டினில் ஏழிரண்டு ஆண்டுகள் கழிந்திடக்
காகுத்தன் மனைவியோடும்
கணமும் பிரிந்திடாத தம்பி இலக்குவனோடும்
கங்கையின் கரையை நண்ணிக்
Images guhan.jpg

காட்டுவன் குகனெனும் வேடனைத் துணை கொண்டு
கங்கை நதியைக் கடந்து,
களிப்புடன் பஞ்சவடித் தீர்த்தத் திருக்கையிங்
கனசேனையோடு பரதனும்
கால் நடையதாய் வந்து சேவித்து நிற்கவே

கமலபாதுகமளித்து

காட்டிலே பதினான்கு ஆண்டுகள் கழிந்த பின்
காலம் சில கழிந்த பின்
கடிதினில் ஏகு எனப் பரதனை அனுப்பவே
காலம் சில கழிந்தபின்
கன்னி என இராவணன் தங்கையாம் சூர்ப்பநகை
கபடங்கள் பல செய்திட
காதோடு தனத்தையும் மூக்கையும் அறுக்கவே
கர தூடணாதி கேட்டு
வேர் கொண்டு எழுந்த தம் சேனை முழுதும் சென்று விண்ணுலகடைந்த பின்னர்
விசை கொண்ட தசமுகன் அறிந்து மாரீசனை
வேடமானாக்கிவிடவே
விளையாடி அந்த மான் நின்றதைக் கண்டுமே
மெல்லியல் சீதை அதை வேண்ட
வீர ராகவ முனிவர் கோதண்டம் வாங்கியே
வெகு தொலை தூரத்தில் எய்ய,
விழும்போது இலக்குவா, என்றவன் கூவவே
வீர இலக்குவனும் ஏக
வீற்றிருந்த பர்ணசாலையோடு சீதை
வேரோடு எடுத்து அரக்கன்
விமானமதிலே வைத்து இலங்கை நகர் செல்கையில்
விடேன் என்ற சடாயு தன்னை
வெட்டித் துணிந்தேகி அசோகவன மீதினில்
தேவியைச் சிறை வைத்திட,
வெந்துயர் கொள் இராகவன் இளைய பெருமாளோடும்
வெங்கானெல்லாம் திரிந்து,
விரைவுடன் தேடி உயிர் விட்ட சடாயுவெனும்
வீரன் கடன் முடித்து
விராதனை வதைத்து சவுரியைப் புட்பக

விமானத்தில் ஏற்றி விட்டு
வீர அனுமானுடன் சுக்கிரீவனைக் கண்டு
வெய்ய வாலியை மடித்து
வித்தக மாருதி தனைத் தூது அனுப்பியே
Imagesring.jpg

வெற்றி அடையாளம் வாங்கி வெள்ளம் எழுபது கொண்டு கடலில் அணை கட்டியே
மேருமுடி இலங்கை மேவி,
வீடணன் சரணடைய அபயம் அவனுக்கு ஈந்து
தம்பி என அவனை ஏற்று,
வெளியாக இராவணன் வராமையால் தேவி
மெல்லியலின் விடுதல் நாடி
பார் கொண்ட அங்கதன் தனைத் தூது அனுப்பியே
பத்துமுடியோனிடத்தில்
பச்சை இள மயில் தனை விட்டு விடு
இல்லை எனில் படை பொருத வருக என்ன
பரமனுறை மாமலையை எடுத்த தோள் ஆண்மையால்
பத்து வாயால் நகைத்து
ப்ராக்கிரமமோடு வந்து மோதிப் பல்சேனையோடு
படை வீரரான சூரர்
பாலரோடு கும்பகனாதியர் இறக்கவே
பார்த்தன் நிகர் மேகநாதன்
படையுடன் எதிர்க்கவே இளைய பெருமாளுடைய
பாணத்தினால் மடித்துப்
பாரெலாம் அஞ்சுறும் மூலபல சேனையைப் பசை அற ஒழித்துப் பத்து முடியோனைத் துணித்து வீடணற்குப் பட்டமும் கட்டி வைத்து,
பருவரதி மாதின் உயர் மமையாம் சீதையாள்
பட்ட சிறை மீட்டி,
இந்திரபதி விட்ட புட்பக விமானத்திலேறியே
படை வீரர் சூழ்ந்து போதப்
பரதனுக்கு அனுமனை முந்தூது போக்கியே
பரதன் உயிர் பாதுகாத்து
பரத்துவாசன் விருந்து உண்டபின் அயோத்தி நகர்
பாங்காக வந்து சேர்ந்து,
பட்டாபிஷேஹமும் பண்ணிஒரு
Imagesramsitha.jpg

குடையினால் பார் முழுதும் ஆண்ட,
சக்கரபதி ஆன ரகுராம சந்திரன் மருகனே!

பரம சிவனார் பாலனே,
பச்சை மயில் ஏறியே பக்தர்கள் தமைக்காக்கப் பாரினில் தேவ சபையாம்
பழநி மலை மேல் வந்து விளையாடி நிற்கின்ற பரமகுருவான குகனே




பழநி மலைக்குப் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் பாடும் பாடல் இது எனக் கேள்விப் பட்டேன். எழுதியவர் பெயர் தெரியாது. தெரிந்தவர்கள் கூறவும். நன்றி.


--Geetha Sambasivam 05:01, 15 ஏப்ரல் 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 15 ஏப்ரல் 2011, 05:15 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,356 முறைகள் அணுகப்பட்டது.