ஸப்த விடங்கத் தலங்கள் 6

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

                                                                திருச்சிற்றம்பலம்

Nagapattinam-Temple1.jpg

ஸப்த விடங்கத் தலங்கள் 6

திருநாகைக்காரோணம்


இறைவர் பெயர் காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்


இறைவி பெயர்- நீலாயதாக்ஷி, கருந்தடக்கண்ணி


தலமரம்- மாமரம்


தீர்த்தம்: தேவ தீர்த்தம், புண்டரீகத் தீர்த்தம்


வழிபட்டோர்:

ஆதிசேஷன், முருகன், அம்பிகை, அகத்தியர், புண்டரீக முனிவர், விசித்திரகவசன், அரசகேசரி, முசுகுந்த சக்கரவர்த்தி, வசிஷ்டர், திருமால், பாற்கரன், பத்திரசேனன், விரூரகன், மித்திரன், சண்ட தருமன், காளகண்டன் முதலியோர்
Nagapattinam-Temple- 7.jpg


தேவாரப் பாடல்கள்:

சம்பந்தர்

1.புன்னையும் விரிகொன்றை 1/84
2.கூனல் திங்கட்குறுங்கண்ணி 2/116

அப்பர்:

மனைவி தாய் தந்தை 4/71
வடிவுடை மாமலை 4/103
பாணத்தால் மதில் 5/83
பாரார் பரவும் 6/22


சுந்தரர்:


1. பத்தூர்க் கிரந்துண்டு...... 7/


சிறப்புகள்:


இது ஆதிசேஷனால் பூஜிக்கப் பெற்றதால் நாகை எனப் பெயர் பெற்றது.


அறுபத்து நான்கு சக்திபீடங்களில் ஒன்று,.


அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மீனவர் குலத்தில் உதித்த அதிபத்த நாயன்மாரின் அவதாரத் திருத்தலம்.


புண்டரீக முனிவர் இறைவரைத் தனது தேகத்தில் ஆரோகரணம் செய்து கொண்டமையால் காயாரோகணம் என்று பெயர் பெற்றது. இது மருவிக் காரோணம் என்றாயிற்று.


காரோணம் என்ற பெயருடைய திருக்கோயில்கள் மூன்று.


அவை யாவன, (1) கச்சிக்காரோணம், (2) குடந்தைக் காரோணம், (3) நாகைக்காரோணம்.


ஆதிபுராணம் முதலிய அரவநகரம்-பார்ப்பதீச்சரம்-சிவராசதானி. பெயர்களாலும் இத்தலம் விளங்கியுள்ளது என்று தலபுராணம் கூறுகிறது.


Nagapattinam-Temple 6.jpg
அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய தலம்.


ஸப்த ரிஷிகளுக்கு இறைவன் மூல லிங்கத்திலிருந்து தோன்றி ஸோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்த தலம்.


சாலிசுக மன்னனுக்குத் திருமணக்கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் விளங்குகின்றது.


சுந்தரருக்கு இறைவன் குதிரை சாந்தம்-பட்டு-நவமணிகள்-முத்துமாலை-சுரிகை முதலானவை வழங்கிய தலம்.


ஸப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று.


தியாகராஜர் சுந்தரவிடங்கர்: நடனம் பாராவாரம். தரங்க நடனம்.


தரங்கம்=அலை. அதாவது கடல் அலையைப் போன்று எழுந்து சுருண்டு மடங்கி விழுந்து ஆடும் நடனம்.


கயிலையையும், காசியையும் போன்று இத்தலம் முத்தி மண்டபத்தைக் கொண்டுள்ளது.


மூவர் பெருமக்களால் பாடல் பெற்ற தலம்


அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களும் பெற்ற தலம்


இத்தல ரதம் கண்ணாடித் தேராகும்


ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப் பட்டுள்ளன. முதல் இராசராசன், குலோத்துங்கன் முதலியோர் காலத்துக்கல்வெட்டுகள் அவை.

சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாகவும் இவ்வூர் விளங்கியது.


நாகைப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகம் சென்று நாக கன்னிகையைக் கூடிப் பெற்ற புதல்வனே தொண்டை நாட்டை ஆண்ட இளந்திரையன் எனப் "பத்துப்பாட்டால்" அறிகிறோம்.


குறுந்தொகைப் புலவர் ஒருவரின் பெயர் நன் நாகையார் எனக் கூறப்படுகின்றது.


நகரின் மத்தியில் இக்கோயில் 180 மீட்டர் நீளம், 75 மீட்டர் அகலம் நிலப்பரப்பு கொண்டு இரண்டு பிராகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.


வைகாசியில் பிரம்மோற்சவமும், ஆடி, தை, அமாவாசை, மாசிமகம், அதிபத்தர் திருவிழா ஆகிய நாட்களில் சுவாமி கடலில் தீர்த்தவாரி அருளுகின்றார்.


நாகைக்காரோணப் புராணம் 61 படலங்களையும் 2506 பாடல்களையும் கொண்டது. இந்நூல் மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்று 1860-ல் அரங்கேற்றப் பெற்றது.

Nagai1.jpg

அமைவிடம்:

நாகைப்பட்டினம் இரயில் நிலையத்திலிருந்து இக்கோயில் 2 கி,மீ தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சை, திருவாரூர், திரிச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.


தரிசன நேரம்:

மு.ப. 6.00-12.00 பி.ப. 4.30-8.00


எழுதித் தயாரித்தது திரு வடிவேல் கன்னியப்பன்.


--Geetha Sambasivam 07:41, 4 டிசம்பர் 2010 (UTC)




பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=ஸப்த_விடங்கத்_தலங்கள்_6&oldid=3771" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 4 டிசம்பர் 2010, 07:41 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,557 முறைகள் அணுகப்பட்டது.