வேடந்தாங்கலில் குழும உறுப்பினர் சந்திப்பு! :Dமரபு விக்கி இருந்துஅப்பா நாரையும், அம்மா நாரையும் புதுசாக் கல்யாணம் பண்ணிக்கொண்டு வேடந்தாங்கல் வந்திருக்காங்க போல!
நாராய், நாராய், செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய், நீயும் நின் மனைவியும் தென் திசைக் குமரியாடி வடதிசைக்கேகுவீராயின் எம்மூர்ச் சத்திமுற்ற வாவியுட் தங்கி, நனைசுவர்க்கூரை கனைகுரல் பல்லி பாடுபார்த்திருக்குமென் ,மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனைக் கண்டனம் எனுமே!
அட?? இவர் இங்கே இருக்காரா?? காலம்பர ஒண்ணுமே சாப்பிடலையே! பாவம்! நாம இப்படி ஓரமா அவர் கவனிக்கிறாப்போல் உட்கார்ந்துக்கலாம், பார்க்கிறாரானு கவனிக்கலாம்.
இவங்க யாரு?? தெரியலையே?? இவங்களும் புதுசாக் குடி வராங்க போல! இங்கே ஒரு குழு உறுப்பினர்கள் தனியாக் கூடி ஏதோ பேசறாங்க. ரகசிய மீட்டிங்கோ?
ஆஹா, அதோ அந்தப்பெரியவர் தான் அந்தக் குடும்பத் தலைவர் போல! தனியா வராரே?? அவருக்கென்ன சிங்கம் போல இருக்கார்! சிங்கம் சிங்கிளாத் தானே வரும்?? அந்தக் குழந்தை என்ன அழகா இருக்கு?? தூக்கிக் கொஞ்சணும் போல இருக்கே?? இப்போத் தான் பறக்கக் கத்துட்டு இருக்கான் போல! தனியா அதுக்குள்ளே மீன் பிடிக்க வந்துட்டானே?? கழுகு பார்க்காமல் இருக்கணுமே! ஈஸ்வரா!
படங்கள் வேடந்தாங்கலில் எடுத்தது ரீச் சந்திரசேகரன்.
படங்களின் விளக்கம் கீதா சாம்பசிவம்
--Geetha Sambasivam 07:23, 29 ஜனவரி 2011 (UTC) |