முத்​தொள்​ளா​யி​ரம் - தாயார் அடைப்ப,​​ மக​ளிர் திறந்​திட...

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

மீனா சுந்​தர்



காத​லும்,​​ வீர​மும்,​​ களி​ந​டம் புரி​யும் பழந்​த​மிழ் நூல் "முத்​தொள்​ளா​யி​ரம்". ​​சேரன்,​​ சோழன், ​​பாண்​டி​யன் என்ற மூவேந்​தர்​க​ளைப் பற்றி தொள்​ளா​யி​ரம் வெண்​பாக்​க​ளில் புகழ்ந்​து​ பா​டும் பாக்​க​ளின் தொகுப்பே இந்​நூல். ​

2,700 பாடல்​க​ளில்,​​ தற்​ச​ம​யம் கிடைத்​தி​ருக்​கும் பாடல்​கள் 110 மட்​டுமே. ​

இந்​நூலை இயற்​றிய புல​வர் பற்​றிய குறிப்​பு​கள் எது​வும் கிடைக்​க​வில்லை.​

காதலை,​​ஒரு புதிய பரி​மா​ணத்​தோடு காட்​டும் அழ​கி​யல் உணர்​வு​களை முகிழ்க்​கும் பாடல்​கள்
இதில் இடம்​ பெற்​றுள்​ளன. ​மகள் மீது தாய்கொண்ட உண்​மை​யான அக்​க​றை​யின் வெளிப்​பாட்டை
மனத்​தி​ரை​யில் காட்​சிப்​ப​டுத்​து​கி​றது.​

முத்​தொள்​ளா​யி​ரப் பாடல்​க​ளில்,​​
சேர மர​பி​னரை கோதை,​​குட​நா​டன்,​​வஞ்​சிக்கோ என்​றும்,​​
சோழ மர​பி​னரை நீர்​நா​டன்,​​கிள்ளி,​​காவிரி நீர்​நா​டன்,​​வளன் என்​றும்,​​
பாண்​டிய மர​பி​னரை மாறன்,​​ தென்​ன​வன்,​​வழுதி,​​ செழி​யன் என்​றும்
குறிப்​பி​டப்​ப​டு​வ​தைக் காண​லாம்.​
சேர மன்​ன​னா​கிய கோதை என்​ப​வன்,​​ மலர்​ மா​லையை அணிந்து வீதி​யில் பவனி வரு​கி​றான்.​

மாலை​யி​லுள்ள மலர்​களை ஆராய்ந்து வண்​டு​கள் மொய்க்​கின்​றன.​

இள​மை​யின் வாச​லில் அடி​யெ​டுத்து வைக்​கும் அழ​குப் பது​மை​கள் ஓர் அழ​கிய காவ​ல​னைக் கண்​டால் என்ன செய்​வர்?

​இளங்கன்​னி​யர் மனம் என்​னா​கும்?​

அழ​குக் காவ​லன் கன்​னி​யர் மன​தைக் கவர்ந்​தி​ழுத்து கொள்​ளை​யிட்டு விடு​வானே!​

இத்​துன்​பம் ஈன்​ற​வள் அறி​யா​ததா?​

கு​திரைபூட்​டிய தேரில் விரைந்து செல்​லும் அவ​னைக் காண​வேண்டி இளம்பெண் ஒருத்தி வாச​லுக்கு விரை​கி​றாள்.​அவ​னைக் கண்​டால் தன்​ ம​கள் நிலை என்​னா​கும் என அஞ்​சு​கி​றாள் அப்​பெண்​ணின் தாய்.​காதல் நோய்கொண்டு கன்​னி​ய​வள் தவிப்​பாளே! ​மன்​ன​வனை நினைத்தே மன​துக்​குள் குமை​வாளே!​ தானி​ருக்​கும் உல​கம் மறந்து பெருந்​துன்​பத் தீயில் கரு​கு​வாளே!​ என்​றஞ்​சி​ய​படி அத்​தாய்,​​வீட்​டுக்கதவை இழுத்​துப் பூட்​டி​ வி​டு​கி​றாள்.​

ஆனால்,​​மகள் என்ன செய்​தாள் தெரி​யுமா?​

அன்னை அவ்​வி​டம் விட்டு அகன்று சென்​ற​தும்,​​​ ஆவல் பொங்க மகள் கத​வைத் திறக்​கி​றாள். ​

மீண்​டும் அங்கே வந்த அன்னை கதவை அடைக்​கி​றாள்.​

மீண்​டும் மகள் கத​வைத் திறக்​கி​றாள். ​

இவ்​வாறு தாய் அடைப்​ப​தும்,​​ மகள் திறப்​ப​து​மாய் அக்கதவுபடும்​பாடு சொல்​லி​மா​ளாது.​

அன்​னை​யர் அடைக்க மக​ளிர் திறக்​க​வு​மாய் அத்​தெ​ரு​வில் உள்ள வீட்​டுக் கத​வு​க​ளின் குமிழ்​கள்
எல்​லாம் தேய்ந்​து​ போ​யின.​

அதா​வது,​​ மக​ளின் காதல்பயிர் மன​தில் செழித்து வளர வளர,​​ வீட்​டுக் கத​வுக் குமிழ் தேய்ந்து
கொண்​டே​யி​ருந்​தது என்​பதை உணர்த்​து​வ​தாய் பாடல் ஒன்று படைக்​கப்​பட்​டுள்​ளது.​

அப்​பா​டல் வரு​மாறு:​​

​"தாயார் அடைப்ப மக​ளிர் திறந்​திட
தேய்ந்திரிந்த குடு​மி​யவே ஆய்​ம​லர்
வண்​டு​லா​வும் கண்ணிவய​மான் தேர்க் கோதையை
கண்​டு​லா​வும் வீதிக்கதவு​​. - (முத்​தொள் -​ பாடல்.10)

எப்​பொ​ரு​ளா​யி​னும் அதி​கம் பயன்​ப​டுத்​தி​னால் தேய்ந்​து​ போ​வது இயற்கை.​

ஆனால்,​​அன்​னை​யர் அடைப்​ப​தா​க​வும்,​​ மகள் திறப்​ப​தா​க​வும்,​​ அத​னால் கதவு தேய்​வ​தா​க​வும் ஓர்
அழ​கிய கற்​பனை,​​ நம்மை இரச​னை​யின் உச்​சத்​துக்​குக் கொண்​டு​செல்​கி​றது.​

இப்​பா​டல் தாய் என்ற உன்​னத உற​வின் மேன்​மையை,​​ கட​மையை,​​ மகள் மீது கொண்ட
அக்​க​றை​யின் வழி அழ​குறநிறுவி நிற்​கி​றது.​

கி​ரா​மங்​க​ளில் இன்​றைக்​கும்,​​மக​ளின் திரு​ம​ணம் முடி​யும்வரை,​​ மக​ளின் வாழ்க்கை குறித்த கவ​லை​யும்,​​நல்​வ​ரன் கண்டு நல்​வாழ்வை ஏற்​ப​டுத்​தித்தரும் அக்​க​றை​யும்,​​அது​வரை மக​ளின் மனம்
சஞ்​ச​லப்​ப​டும் வகை​யில் ஏதும் நடந்​து​வி​டக்​கூ​டாதே என்​கிற பொறுப்​பு​ணர்ச்​சி​யும்
பெற்​றோ​ரி​டம் இருந்து வரு​வ​தைக் காண​லாம்.​

இந்​தப் பொறுப்​பு​ணர்ச்சி ஓர் உள​வி​யல் சார்ந்த தற்​காப்பு நட​வ​டிக்​கை​யா​க​வே ​ப​டு​கி​றது.​

மேலும்,​​ இருண்​மை​யு​டன் எழு​தப்​ப​டும் புல​வர்​க​ளின் எழுத்​து​கள் புரி​ய​வில்லை என்​றும்,​​எளிய
சொற்​க​ளால் புரி​யும் வண்​ணம் எழு​து​கி​றார்​கள் கவி​ஞர்​கள் என்​ப​தை​யும் விளக்​கும் வண்​ண​மாய்,​​
"புல​வர் அடைப்ப கவி​ஞர் திறப்​பர்", என்​னும் சொல்​லா​டல் இப்​பாட​லில் இருந்தே
தோன்​றி​யி​ருக்​கக்​கூ​டும் என்று நினைக்​கத் தோன்​று​கி​றது.​​

நன்றி:- தினமணி


--Ksubashini 18:53, 17 மே 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 17 மே 2010, 18:53 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,651 முறைகள் அணுகப்பட்டது.