மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 11மரபு விக்கி இருந்துஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப இது வரைக்கும் பிராட்டியையும், பரமாத்மாவையும் சேர்த்து எழுப்பினாங்க. இப்போப் பிராட்டி எழுந்து வந்துவிடுகிறாள் போலும். ஆகையால் இந்தப் பாசுரம் பிராட்டியும் சேர்ந்தே பகவானை எழுப்பியதாய் ஐதீகம்.
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!
உலகினில்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான
முதலில் கண்ணனின் காலடியில் அவன் கண்பார்வை படும் வண்ணம் அமர்ந்திருந்தான் துரியோதனன். ஆனால் பின்னர் செருக்கு மீதூறக்கண்ணன் தலைமாட்டில் வந்து அமர்கிறான். தூங்கும் கண்ணன் நம்மைத் தான் முதலில் கவனிப்பான் என்று எண்ணி அவனிடம் உதவியைக் கேட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு. அடுத்து வந்தான் அர்ஜுனன். கண்ணன் தூங்குவதைக் கண்டான். அவன் சிவந்த பாதங்கள் சற்றே வெளியே தெரிந்தன. செந்தாமரை மலர்கள் போன்ற அந்தத் திருப்பாதங்கள் தங்கள் ஐவருக்காகவும் கால் நோக தூது நடந்ததை நினைத்தான். அவன் கண்களில் நீர் பெருகிற்று. கண்ணன் மேல் பாசமும், அன்பும் மீதூறக் காலடியில் அமர்ந்து அவன் கால்களைப்பிடித்துவிட ஆரம்பித்தான்.
கண்ணனின் முகத்தில் குறுநகை துலங்கக் கண்விழித்தான். துரியோதனன் நினைத்தது போலவே அருகே அமர்ந்திருந்தஅவனைக் கண்ணன் முதலில் பார்க்கவில்லை. முதலில் பார்த்தது அர்ஜுனனைத் தான். எனினும் துரியோதனனும் அருகே அமர்ந்திருப்பதை உணர்ந்த கண்ணன் அவனிடம் என்ன வேண்டும் துரியோதனா என்று கேட்க துரியோதனனுக்கு உள்ளூற மகிழ்ச்சி. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன் வேண்டுதலைக்கூறுகிறான் துரியோதனன். "இரு துரியோதனா, காலடியில் அமர்ந்திருப்பது யார்? நான் கவனிக்கவில்லையே? அவரையும் என்னவெனக் கேட்கிறேனே! மேலும் முதலில் நான் பார்ப்பவருக்கு அன்றோ முதலில் என் உதவியைத் தரமுடியும்? அது தானே நியாயமும் கூட?" என்றான் கண்ணன். துரியோதனன், "ம்ம்ம்ம்" என்று கோபத்தோடு உறுமினான்.
"கண்ணா, பேச்சு மாறாதே! நீ முதலில் எவரைக் காண்பாயோ அவருக்கே உதவி செய்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறாய்!" துரியோதனன் கோபத்தோடு உறுமினான். "ஆம், துரியோதனா, ஆனால் என் கண்கள் கண்டது முதலில் அர்ஜுனனை அன்றோ?"
"இரு அப்பா, இவன் சொல்வதையும் கேட்டுவிடுகிறேன், உனக்கே நான் முதலில் உதவி செய்வேன்." என்று கூறிய கண்ணன் காலடியில் அமர்ந்திருப்பது அர்ஜுனன் எனத் தெரிந்து கொள்கிறான். அவனுக்குத் தெரியாததா? புரியாததா? எனினும் அப்போதுதான் தெரிந்தாற்போல் காட்டிக்கொண்டான். "அர்ஜுனா, நீயா? ம்ஹும் தாமதம் செய்துவிட்டாயே! துரியோதனன் முதலிலேயே வந்துவிட்டானாமே? என்னால் என் படை வீரர்களை ஒருவருக்கும், நான் மட்டும் எந்த ஆயுதமும் இல்லாமல் இன்னொருவருக்கும் உதவ முடியும். இந்த இரண்டு உதவிகளில் உனக்கு எது வேண்டும்?? "
அர்ஜுனன், "கண்ணா, எனக்கு நீ ஒருவனே போதும், உன்னையன்றி எனக்கு வேறு துணை எதற்கு?" என்று கூற, கண்ணனும் குறுநகை மாறாமல், "அப்படியா? எனில் துரியோதனனுக்கே என் படை மொத்தமும் பணி செய்யும்! நீ காலடியில் அமர்ந்திருந்ததால் தெரியவும் இல்லை. மேலும் முதலில் வந்ததும் துரியோதனன் அன்றோ?"
"கண்ணா, எனக்கு உன் படையோ, உன் வீரர்களோ, உன் ரதங்களோ, உன் யானைப்படை, குதிரைப்படைகளோ தேவை இல்லை. எனக்குத் தேவை நீ ஒருத்தன் மட்டுமே. நீ மட்டும் எனக்கருகே இருந்தால் போதும்!" அர்ஜுனன் வேண்டுகோள்.
"அப்படியே ஆகட்டும் அர்ஜுனா, ஆனால் நான் ஆயுதமே எடுக்க மாட்டேன், வேண்டுமென்றால் ( என்ன குறும்பு பாருங்க) உனக்கு ரத சாரதியாக ஊழியம் செய்கிறேன். (அர்ஜுனனைப் போல் கொடுத்து வச்சவங்க யாரு?) நான் நிராயுதபாணியாகத் தான் உனக்குத் துணை இருப்பேன். என் படைகள் மொத்தமும் துரியோதனனுக்கு ஊழியம் செய்யும்." கண்ணன் கூற அர்ஜுனன் தலை வணங்கி ஏற்றுக்கொண்டான். கண்ணனின் அருகாமை ஒன்றே தனக்கு வேண்டியதைத் தனக்குப் பெற்றுத் தரும் என முழுமையாக நம்பினான் அர்ஜூனன். வெறும் ஆட்களின் எண்ணிக்கையில் நம்பிக்கை வைத்தான் துரியோதனன்.
வென்றவர் யார்னு சொல்லவே வேண்டாம் இல்லையா?
அது போல்தான் இங்கேயும். இவ்வுலகில் உள்ள அனைத்து அரசர்களும் கண்ணனின் ஆற்றலையும் வீரத்தையும் வேண்டிக் கேட்டுக் கண்ணனின் கட்டிலருகே காத்திருந்தால் ஏ, கண்ணா, என்னப்பா, நாங்கள் அனைவரும் உன் கருணைப்பார்வைக்காக அன்றோ வந்திருக்கோம். உன்னிடம் எதையும் எதிர்பார்த்து நாங்கள் வரவில்லை அப்பா. எங்களைக் கண் திறந்து பார்த்து எங்களை ஆட்கொள்வாய் எனக் காத்திருக்கோம்.
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
--Geetha Sambasivam 09:53, 6 ஜூலை 2011 (UTC)
|

