பொடி வகைகள்மரபு விக்கி இருந்துபொடி வகைகள்:-
தேவையான பொருட்கள்:-
பருப்புப் பொடி முதல் முறை: துவரம்பருப்பு 100 கிராம், மிளகாய் வற்றல் பத்து, மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயப் பொடி அல்லது துண்டுப் பெருங்காயம் பொரித்துப் பொடி செய்து கொள்ளவும். உப்பு தேவைக்கேற்ப.
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு மூன்றும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். எல்லாம் சேர்ந்து 150 கிராம் இருந்தால் மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் பதினைந்து, பெருங்காயம் பொடி அல்லது முன் சொன்ன முறையில் பொரித்தது, உப்பு தேவைக்கேற்ப. எல்லாவற்றையும் வெறும் சட்டியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். இந்தப் பொடியை எல்லாப் பருப்புக்களையும் எண்ணெய் விட்டு வறுத்தும் செய்யலாம். வறுக்கையில் கறிவேப்பிலையும் சேர்க்கலாம். ஆனால் எண்ணெய் விட்டு வறுத்தால் சீக்கிரமாகப் பயன்படுத்த வேண்டும்.
அங்காயப் பொடி எனும் ஐங்காயப் பொடி: இது பிரசவம் ஆனவர்களுக்கும் உடல் நலத்துக்கும், வயிற்றுக்கோளாறுகளுக்கும் நல்லது. பொதுவாக உணவு ஜீரணம் ஆகாமல், வாந்தி, வயிற்றுப் போக்கு என்று இருக்கும் சமயம் சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு நல்லெண்ணெய் காய்ச்சி ஊற்றிச் சாப்பிட்டால் பேதி மட்டுப்பட்டு வாயில் உணவின் சுவை தெரிய ஆரம்பிக்கும்.
தேவையான பொருட்கள்:
வேப்பிலைக்கட்டி எனும் நாரத்தை இலைப்பொடி: தனி நாரத்தை இலை, பறித்துக் கழுவிக் காயவைத்து ஆய்ந்தது, இரண்டு கிண்ணம், எலுமிச்சை இலை இரண்டு கிண்ணம், மிளகாய் வற்றல், உப்பு, ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் பொடி செய்தது ஒரு டீஸ்பூன். மேற்சொன்ன சாமான்களை லேசாக வாணலிச் சூட்டில் பிரட்டிக்கொண்டு நன்கு இடித்து வைக்கலாம். இடிக்க முடியாதவர்கள் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
மிளகாய் வற்றல் 50 கிராம், தனியா 50 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு 50 கிராம் சரிசமமாக. லவங்கப்பட்டை ஒரு துண்டு, கிராம்பு இரண்டு, பெருங்காயம் பொரித்துப் பொடித்தது ஒரு டீஸ்பூன், கொப்பரை ஒரு மூடி துருவிக்கொள்ளவும் அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஒரு பிடி. உப்பு தேவையான அளவு.
தோசை, இட்லிக்கு மிளகாய்ப்பொடி: மிளகாய் வற்றல் 100 கிராம், கடலைப்பருப்பு ஒரு கிண்ணம், உளுத்தம்பருப்பு இரண்டு கிண்ணம், பெருங்காயம் ஒரு துண்டு, கறுப்பு எள் 50 கிராம், வெல்லம் தேவையானால் ஒரு டேபிள் ஸ்பூன் பொடி செய்து, உப்பு தேவைக்கு ஏற்ப.
பெருங்காயத்தைப் பொரித்துக்கொள்ளவும். மிக்சி ஜாரில் முதலில் மிளகாய்வற்றல், உப்பு, பெருங்காயத் துண்டு, வெல்லம் ஆகியவற்றைப் போட்டுப் பொடிக்கவும். பின்னர் பருப்பு வகைகளைச் சேர்த்துப் பொடித்துக்கொண்டு கடைசியில் எள்ளையும் போட்டுப் பொடிக்கவும். நன்கு கலந்து வைக்கவும். இட்லி, தோசை போன்றவற்றிற்குச் சட்னி செய்யாமல் இதைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். --Geetha Sambasivam 15:32, 25 செப்டெம்பர் 2011 (UTC)
|