பழைய மொழிகளின் திரிபு!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பழமொழிகளின் திரிபு.



 பழமொழி என்பது பழைய மொழிகளின் திரிபோ என்று நினைக்கத் தோன்றுகிற்து,நம் முன்னோர்கள் வாழ்க்கை நடைமுறையில ஏற்படும் நிகழ்வுகளை, இவ்வசனங்களுக்கு ஈடாக இணைத்துக் கூறுவர்,


1.சோற்றில் இருக்கும் கல்லை எடுக்க மாட்டானாம், சொக்கநாதன் கோயில் வைக்கோலை பிரித்து போடுவானாம்.

(பொருள்)

ஒருவன் தனவீட்டு வேலைகளச் செய்யாமல் மற்றவர்கள் வீட்டு பணிகளைச் செய்வதைக் கூறுகிற்து.


2வந்தமாட்டையும் கட்டமாட்டான் வராதமாட்டையும் தேடமாட்டான்,

(பொருள்)

ஒருவரின் சுய நலத்தன்மையைக் குறிக்கும்,அதாவது வந்தால் வா போனால் போ.


3.நோகாமல் நோன்பு கும்பிடமுடியுமா

(பொருள்)

எந்த கடவுள் சடங்கானாலும் விரதம் இருந்து சுத்தபத்தத்துடன் படையல் செய்வதைக்குறிப்பது


.4,சட்டிப்பருப்போடு சேரணும்,அல்லது சட்டி நெருப்போடு சேரணும்

(பொருள்)

பகைமைக் கொண்ட குடும்பங்கள் சேருவதானால் ஒன்று ,நல்ல சுப காரியங்களில் கூடணும் அதுதான் சட்டி ப்ருப்பு,அல்லது துக்க நிகழ்வுகளில் கூடணும் அது சட்டி நெருப்பு.


5.வெள்ளளிக்குச்சூடும் வேற்று அஹத்தில் வார்தையும் தாங்காது

'('பொருள்)

வெள்ளி பாத்திரங்களில் சூடான திரவங்கள் நிரப்பினால் கையால் தொடமுடியாது,அதே போல் மருமகங்கள் மாமனார் வீட்டுச் சொல் (தாக்கும்படி இருந்தால்) தாங்கமாட்டார்களாம். 


நன்றி சாரதா,

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=பழைய_மொழிகளின்_திரிபு!&oldid=6165" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 15 ஏப்ரல் 2011, 09:49 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,444 முறைகள் அணுகப்பட்டது.