நவராத்திரி நாயகியர் 10மரபு விக்கி இருந்து
ப்ரம்மசாரிணி: பர்வதராஜன் மகளாய்ப் பிறந்த பார்வதி மகேசனையே மணக்க எண்ணி விரதம் இருந்தாள். அப்போது அவளைச் சோதிக்க எண்ணிய ஈசன் அவள் முன் தோன்றி மகேசனை மணாளனாக அடைவது எளிதல்ல என்றும், அதற்காக அவள் தவமியற்றவேண்டும் என்றும் விருத்தனாக வந்து சொல்ல, அதன்படியே தவம் இயற்றினாள் பார்வதி. சாட்சாத் பிரம்மம் ஆன அவளே தவ வடிவாக விளங்கி தவம் இருந்ததால் பிரம்மசாரிணி எனப் போற்றப் பட்டாள். நவராத்திரியின் வியாழக்கிழமைக்கான தேவி இவளே. தவம் செய்யும் காமாக்ஷி இவள் வடிவே என்பர். வியாழக்கிழமைகளில் இவளைப் பூஜித்தால் வியாழன் ஆன தேவகுரு ஞானம், கல்வி, அமைதியான நிலையான வாழ்வு கிட்டச் செய்வார். திரிபுர சம்ஹாரத்தின் போது ஈசனின் இடக்கால் பெருவிரலால் வரையப் பட்ட அஷ்டவகைக்கோலத்தில் இருந்து தோன்றியவளே பிரம்மசாரிணி ஆவாள். இன்றைய அலங்காரம்: சர்ப்பராஜனை ஆசனமாய்க் கொண்ட சண்டிகாதேவி.தூம்ரலோசனன் என்னும் அசுரனை வதம் செய்த சண்டிகா தேவி கையில் அக்ஷமாலை, கபாலம், தாமரை, தங்கக்கலசம் போன்றவற்றை ஏந்திய வண்ணம் காக்ஷி தருவாள். சஷ்டி தினமான இந்த ஆறாம் நாள் தேவியின் எண்ணற்ற பெயர்களை கோலமாவினால் எழுதுதல் நன்று. இன்று ஏழு வயதுள்ள பெண் குழந்தையைச் சண்டிகாவாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்றும் சிவந்த நிறமுள்ள மலர்களே வழிபாட்டுக்கு உகந்தது எனினும் செம்பருத்தி, ரோஜா போன்ற மலர்களையும் செந்தாமரைப் பூக்களோடு சேர்த்து அர்ச்சிக்கப் பயன்படுத்தலாம். இன்றைய நிவேதனம் கல்கண்டு சாதம். செய்முறை சுருக்கமாய்ச் சொல்லப் படுகிறது. ஒரு கப் அரிசி, அரை கப் பாசிப்பருப்பு வெறும் வாணலியில் வறுத்துப் பாலில் குழைய வேகவிடவேண்டும். அரை லிட்டர் பாலாவது தேவை. குழைந்த சாதத்தில் கட்டிக் கல்கண்டைப் போட்டு(டைமண்ட் கல்கண்டு நல்லா இருக்காது.) சேர்ந்து கொதித்து வந்தபின்னர் குங்குமப் பூ, ஜாதிக்காய், ஏலக்காய்,முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களால் அலங்கரித்துக்க் குழந்தைக்குக் கொடுக்கலாம். இன்றைய சுண்டல் மொச்சைப்பருப்புச் சுண்டல்.
காய்ந்த மொச்சைப் பருப்பை முதல் நாளேஊற வைத்துக்கொண்டு குக்கரில் மறுநாள் உப்புச் சேர்த்து வேக வைக்கவும். பின் அதிகப் படி நீரை வடிகட்டிவிட்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, மி.வத்தல், கருகப்பிலை பெருங்காயத் தூள் சேர்த்துக்கொண்டு மொச்சையைப் போட்டு வதக்கவும். தேவை எனில் கொஞ்சம் மிளகாய் வற்றலும், தனியாவும் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து வைத்த தூள் சேர்க்கலாம். இறக்கும்போது தேங்காய் துருவல் சேர்க்கவும்.
இனி துர்காஷ்டகம். குருவுமானவள் துர்கா குழந்தையானவள் லலிதா நவரத்னமாலையின் இன்றைய ரத்னம் மரகதம்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே --Geetha Sambasivam 09:18, 29 நவம்பர் 2010 (UTC) |


