தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 1 தொடர்ச்சி 2மரபு விக்கி இருந்துபுதிய கற்கோயில்
பனிமய மாதாவுக்குப் புதிதாகக் கற்கோவில் அமைக்கும் தனது திட்டத்தை சுவாமி விஜிலியுஸ் மான்சி உடனடியாக செயல்படுத்த முனைந்தார். இடி விழுந்த அதே இடத்திற்கு நேர் எதிரிலே புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்ட விரும்பினார். கற்கோவில் எழுப்ப டச்சுத் தளபதியின் அனுமதி தேவை என்பதை அறிந்தார். சுவாமி விஜிலியுஸ் மான்சிக்கு டச்சு மொழி நன்றாகத் தெரியும். அதனால் டச்சுத் தளபதியிடம் புதிய ஆலயத்தைப் பற்றி டச்சு மொழியில் விளக்கமாகப் பேசி அவருடைய அனுதாபத்தைப் பெற்றார். டச்சுத் தளபதியும் பனிமய அன்னைக்குப் புதிய ஆலயம் கட்ட அனுமதி வழங்கினார். ஆனால் அந்த ஆலயத்தைக் கற்களால் கட்ட அனுமதி மறுத்துவிட்டார். காரணம் போர்க்காலங்களில் எதிரிகள் அந்தக் கற்கோவிலை அரணாகப் பயன்படுத்தக் கூடும் என அஞ்சினார். அதனால் சுவாமி விஜிலியுஸ் மனமுடைந்து போனார். இருப்பினும் அன்னையின் ஆதரவை நம்பி அவர் கொழும்பிலிருந்த டச்சு ஆளுநருக்கு முடங்கல் எழுதி, அதில் புதிய ஆலயத்தின் அளவுகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு, அதனைக் கற்களால் கட்டுவதற்கு அனுமதி வேண்டினார். டச்சு ஆளுனரும் சுவாமி விஜிலியுஸ் மான்சி தனது முடங்கலில் கூறியிருந்த காரணங்களை அலசிப் பார்த்துவிட்டுப் புதிய ஆலயத்தைக் கற்களால் கட்டுவதற்கு அனுமதி வழங்கினார். இதனால் டச்சுத் தளபதி சுவாமி விஜிலியுஸ் மான்சி மீது சற்றுக் கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். அதன் விளைவாக ஆலயம் கட்டுவதில் அவ்வப்போது சில தடைகள் குறுக்கிட்டன. ஆனால் பனிமய அன்னையின் அருளால் தடைகளெல்லாம் விரைவில் நீங்கின.
அடிக்கல் நாட்டு விழா
அன்னையின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகும் எதிர்ப்புகள் தொடர்ந்தன. தூத்துக்குடிக்குப் புதிதாக வந்த டச்சுத் தளபதி, ஆலய அளவுகள் பற்றிச் சில பொய்யான தகவ்ல்களையும், சுவாமி விஜிலியுஸ் மான்சி பற்றிச் சில பொய்யான குற்றச்சாட்டுகளையும் பட்டியலிட்டு கொழும்பிலிருந்த டச்சு ஆளுனருக்கு அனுப்பி வைத்தார். இதனால் ஆலயக் கட்டுமானப் பணி தடைபட்டுக் கொண்டிருந்தது. இதற்கு ஒரு முடிவு காணும் நோக்குடன் சுவாமி விஜிலியுஸ் மான்சி புதிதாக உருவாகயிருக்கும் அன்னையின் கற்கோவிலின் உண்மையான அளவுகளை வரைபடத்துடன் குறிப்பிட்டு, அத்துடன் தூத்துக்குடி டச்சுத் தளபதி தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பும் தெரிவித்து முடங்கல் ஒன்று தயாரித்து அதனை அன்றைய பரதகுல சாதித்தலைவரான தொன் எஸ்தேவான் தெ குருஸ் மூலம் கொழும்பிலிருந்த டச்சு ஆளுனருக்குக் கொடுத்து அனுப்பினார். சுவாமி விஜிலியுஸ் மான்சி அனுப்பிய முடங்கலைப் படித்த ஆளுனர், உண்மை நிலவரங்களைப் புரிந்து கொண்டு, புதிய ஆலய கட்டுமான வேலையை ஆரம்பிக்குமாறு மிகவும் பரிவோடு அனுமதி எழுதிக் கொடுத்தார். அத்துடன் பொய்க்குற்றச்சாட்டுகளைக் கூறிய தூத்துக்குடி டச்சுத் தளபதியை உடனே பதவியிலிருந்து நீக்கிக்கொழும்புக்கு வரும்படி உத்தரவு பிறப்பித்தார்.
மகிழ்ச்சிப் பெருக்கோடு சுவாமி விஜிலியுஸ் மான்சி பனிமயத் தாய்க்குப்புதிதாகக் கற்கோவில் கட்டும் பணியை ஆரம்பித்தார். ஆலயத்தின் வேலைகள் துரிதமாக நடந்தன. ஒரே ஆண்டில் வேலை முற்றுப் பெற்றது. ஆலயக்கூரையில் ஓடுகளும் பதிக்கப்பட்டன.
ஆலயத் திறப்பு விழா
திறப்பு விழாவுக்குப் பின்னர் வந்த ஆண்டில் அன்னையின் ஆலயம் பலவிதமான அம்சங்களையும், மாற்றங்களையும் பெற்றுப் பேராலயமாக முத்து நகரில் வானளாவ உயர்ந்து நிற்கின்ற, 1982-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி திருத்தந்தை 23-ஆம் அருளப்பர் இவ்வாலயத்தைப் "பேராலயம்" (Basilica) என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தினார். புனிதப் பனிமய அன்னையின் எழில்மிகு பேராலயம், வரலாற்றுப் பாதையில் சீர்குலைவுகளையும் அதே நேரத்தில் பல அற்புத நிகழ்வுகளையும் சந்தித்து இவ்வாண்டில் 425-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடி வரலாற்றுப் பேரேட்டில் பொன் எழுத்துக்களால் பொறித்துப் பெருமைப்பட வேண்டிய ஓர் அற்புதம் என்பதில் ஐயமில்லை.
--Geetha Sambasivam 09:34, 24 ஜூலை 2012 (UTC) |