திருமால் வழிபாட்டின் வரலாற்றுச் சிறப்பு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


இதனால்தான், தொன்மையான தமிழ் இலக்கியங்கள் தமிழ் நில அமைவை (tamil
landscape) விளக்கிச் சொல்லும் போது மரம் செடி, கொடிகள் மாறுபடுவது போல்
பல்வேறு நில அமைவுகளுக்கு ஏற்றவாறு கடவுளரையும் வெவ்வேறாய் வைத்தன. இதன்
உளவியல் சூட்சுமத்தை இருபதாம் நூற்றாண்டு மனோதத்துவியல் உணர்ந்து
பாராட்டுகிறது. ஐந்திணைக் கோட்பாடு என்றழைக்கப் படும் இத்திணை வகுப்பில்
முல்லைத் தெய்வமாய் அறிமுகமாகிறான் கண்ணன். முல்லை என்பது காடும், காடு
சார்ந்த பகுதியைக் குறிக்கும். மரங்கள் அடர்ந்த நில அமைவுடன் கண்ணன் என்னும்
தெய்வம் எவ்வாறு ஒத்துப் போகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டுமெனில்,
நம்மாழ்வார் இறைவனை எவ்வாறு தனது அனுபூதி நிலையில் உணர்கிறார் என்பதைப்
பார்க்க வேண்டும்.


"வேரும் வித்துமின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன் மிகு பெரு மர"

என்று வியக்கிறார் நம்மாழ்வார்.



இங்கு திருமாலை மரமாக உருவகிக்கிறார். தொன் மரம் என்பதை - கால அளவிற்கு
(beyond time) உட்படாதது என்று புரிந்து கொள்ளவேண்டும்; மிகு மரம் என்றால் -
வௌ¢ அளவுக்கு (beyond space limitation) உட்படாதது என்றும்; பெரு மரம்
என்பதால் - உருவ அளவுகளைக் கடந்தது (immeasurable) என்றும் ஆகிறது. அதாவது
மெய் பொருள் என்பது கால, வௌ¢, அளவுகளைக் கடந்த ஒன்று என்று சொல்கிறார்.
தன்னை அண்டியவற்கு தண்ணிழல் தருவது மரம். நல்லவர், கெட்டவர் என்று பேதம்
பார்க்காது நிழலும், பழமும் (பரமபதம்) தருவது மரம். மரம் என்ற உருவகத்திற்கு ஒரு
உருவம் கொடுக்க முயலும் போது மரங்கள் அடர்ந்த காடும், காடு சார்ந்த நிலமும்
நினைவுக்கு வருவது தவிற்க இயலாதது. இப்படித்தான் தொல்காப்பிய பாடலும்
கண்ணனை முல்லைத் தெய்வமாக உருவகித்து
தமிழ் உலகிற்கு அளிக்கிறது


.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்.....
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

.

கடைச் சங்க நூலான புறநானூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடும் வழக்கம் இருப்பது
அறியக் கிடைக்கிறது. அரி, அரன், அயன் என்னும் முத்தெய்வங்களில் ஒன்றை
முதன்மைப் படுத்தி வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இங்கு அரி என்பது
திருமாலையும், அரன் என்பது சிவனையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கும்.
கடைச் சங்கம் நிலைப்படும் முன் இடைச் சங்கமும், அதன் முன் முதல் சங்கமும் இருந்த
தொன்மையான இலக்கிய பாரம்பரியம் நமது. இக்கால கட்டத்தில் வேளிர் குல
மக்களுடன் கண்ணன் தமிழ் சங்கத்தை நிறுவகித்த பழம் செய்தி ஒன்றும் உள்ளது. சங்க
நூல்களில் மிகவும் பெருமை வாய்ந்ததும், காலத்தை வென்று இன்றளவும் சிறப்புடன்
போற்றப் படுவதும் திருக்குறள் ஆகும்.வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் திருமால் வழிபாடு
சீறும், சிறப்புடன் இருந்திருப்பதை பரணர் என்னும் சங்கப் புலவர் இயற்றிய ஒரு குறள்
சொல்லும்:


தேவரில் திருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர் வெண்பா


இதன் பொருள், எவ்வாறு திருமால் என்பவன் வணங்கும் தெய்வங்களில் மிக
உயர்ந்தவனாக உள்ளனோ, அதுபோல் தமிழ் வெண்பாக்களில் சிறந்து விளங்குகிறது
வள்ளுவரின் குறள் என்பதாகும்



.

. - 

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com மற்றும் Palayapattinam

இப்பக்கம் கடைசியாக 14 டிசம்பர் 2010, 06:30 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,091 முறைகள் அணுகப்பட்டது.