திருப்பூவணம் ​பெயர்க்காரணம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

திருப்பூவணம் - இத்திருத்தலம் மூவர் ​தேவாரமும் ​பெற்றது,
மது​ரையின் கிழக்கு வாயிலாக விளங்கியது; 36ஆவது திருவி​ளையாடல் ந​டை​பெற்ற இடம்; கரூர் ​தேவரும், அருணகிரிநாதரும் பாடிய ​பெரு​மையு​டையது;ஆனால் தற்​போது திருப்பூவணம் என்ற ​பொருள் ​பொதிந்த காரணப் ​பெயரானது, காரணகாரியம் ஏதுமின்றித் திருப்புவனம் என்ற ​பொருளற்ற ​பெயரால் அ​ழைக்கப்படுகிறது.


திருப்பூவணம் என்ற ​பெயருக்கான காரணத்​தைக் காண்ப​தே இக்கட்டு​ரையின் ​நோக்கம்.


  • திருப்பூவணன் - என்பது சிவலிங்கத்தின் ​பெயர்
  • மின்னாள் - என்பது அம்​மையின் ​பெயர்
  • திருப்பூவணத்தில் உள்ள மூலலிங்கத்திற்குப் பூவணன் என்று பெயர்.
  • அணங்கு என்றால் ​பெண் ​தெய்வம்
  • அணன் என்றால் ஆண் ​தெய்வம்

 

கருப்பு ஆனவன் - கருப்பணன்
தேவன் ஆனவன் - தேவணன்
வானம் ஆனவன் - வாணன் (அம்பலவாணன் )
பா ஆனவன் - பாவணன்

இதே போன்று
பூ ஆனவன் -பூவணன் என்றானது.
திருப்பூவணத்தில் உள்ள மூலலிங்கம் பாரிசாதப் பூவால் ஆனது.

 

"செய்யவொண்பட்டினாலுந்திகழ்ந்தவெண்பட்டினாலுந்
துய்யபூங்கதலிபூகமாதியதொங்கறன்னா
லைதிகழ்பூவணத்தெம்மடிகளையலங்கரித்தோர்
பையழகொழுகுந்துத்திப்பன்னகாபரணனாவார்" (பாடல் 680)

என்ற பாடலிலே, பூங்கதலி (பூந்தார்) சிவலிங்கமாகச் சமைந்திருக்கின்ற (A Fossil of Parijatha Flower) செய்திகூறப்பட்டுள்ளது.


Thirupuvanam.JPG


இதனால், "பூவால் ஆகிய சிவலிங்கத்திற்குப் பூவணன்" என்ற காரணப் பெயர் உண்டானது. 

"பூவண்ணன்" என்ற சொல் "பூவணன்" என்றானது என்றும் கூறுகின்றனர். 

திருப்பூவணத்தில் உள்ள இறைவன் புனிதத்தன்மை உடையவன் என்ற பொருளில்,

  • "பொருவில்பரிபூரணமாம் பூவணத்தெம்புனிதனை யாம் போற்றுவாமே" (பாடல் எண் 5)
  • "போர்மேவுமழுவேந்தும் பூவணத்தெம் புண்ணியன் பொற்கோயினண்ணுஞ்" (பாடல் எண் 20)
  • "புல்லிய பூவணத்தெம்புனிதனுக் கினிதளிப்போர்" (பாடல் 437)
  • "பொங்குபூவணத்தெம்புனிதன்றனக்" (பாடல் எண் 1327)
  • "பூவணத்துப் புனிதன்" என்று பாடல் எண் 5, 2,0 437, 1327 ஆகிய பாடல்களில் பாடப் பெற்றுள்ளது.
  • "பூவுலகும்பணிந்தேத்தும் பூவணநாயகனை நித்தம் போற்றல் செய்வாம்" (பாடல் 6)
  • "பூவணநாயகன்" என்று 6ஆவது பாடலில் பாடப் பெற்றுள்ளது.
  • "நற்பொழிறிகழ் நண்ணிய பூவணன்" என்று 200 ஆவது பாடலில் பாடப் பெற்றுள்ளது.
  • அரன் உடைய பூவணன் என்ற பொருளில் "பூவணத்தரன்ற" என்று பாடல் எண் 4, 7, 1,0 1261, 1433 ஆகிய பாடல்களில் பாடப் பெற்றுள்ளது.
  • "மாமாது வடிவிலங்கமன்னிய பூவணத்தரன் றாள் சென்னிசேர்ப்பாம்" (பாடல் எண் 4)
  • "திகழ்தருபூம் பொழில்புடைசூழ் தென்றிருப் பூவணந்தரன் றாள் சிந்தை செய்வாம்" (பாடல் எண் 7)
  • "ஆடல்செய்பூவணத்தரனுக்கானெய்யாற்" (பாடல் எண் 1261)
  • "பொன்னுலகேத்துந்தொல்சீர்ப் பூவணத்தரனைப் பூசை" (பாடல் எண் 1433)
  • "பாரிசாத வனேசன்" என்று 744ஆவதுபாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


புராதனன் பூவணன்

திருப்பூவணத்தில் உள்ள சிவலிங்கம் மிகவும் "புராதனமானது" என்று சூரியன் பூசனைச் சருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

"பொற்பினீடியதா சிவத்தின் மகிழ் பூவணத்துறை புராதனர்க்
குற்சவந்தனை நடாத்த வெண்ணி மன்னுவகை பூத்தெழுசுவேச்சையால்
வெற்றி யானைமுகனாதி விக்கிரகம் வேறுவேறு மறைவிதியனா
லற்பின் மேதகைய செம்பொனா லுருவமைத்து நன்மணி யழுத்தியே" (பாடல் 283)

என்று குறிப்பிடப் பெற்றுள்ளது.

திருப்பூவணத்தில் சூரியன் பூசை செய்த வரலாறு மிகவும் தொன்மையானது. அவ்வாறிருக்க அக்காலத்திலேயே அச்சிவலிங்கம் மிகவும் புராதனமாக இருந்துள்ளது.

திருப்பூவணத்தில் இலிங்கமானது நாற்பதாயிரம் சதுர் யுகங்கள் பூமிக்குள்ளே இருந்துள்ளது. இதன் பழமை "அண்டங் குகை நாற்பதின் னாயிரஞ் சதுர்யுகம் மெய்தினேன்" என 1398ஆவது பாடலில் கணக்கிட்டுக் கூறப்பட்டுள்ளது. இதனால் திருப்பூவணநாதரின் தொன்மை நன்கு புலப்படுகிறது.

பண்​டைப் பழந்தமிழ்​போல் பாரிற் ​தோன்றிய பூவணன் அடி​போற்றி புவனத்தில் வாழ்ந்திடு​வோம்,


கி.கா​ளைராசன்

பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Dev

இப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2010, 16:36 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,490 முறைகள் அணுகப்பட்டது.