தாயிற்சிறந்த கோயில் இல்லை......
பெற்ற தாயை மறந்த பிள்ளைகள்: பிச்சை எடுத்து வாழும் மூதாட்டி.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆதரவற்ற நோயாளிகள் அதிகளவில் தஞ்சம் புகுந்துள்ளனர். நீலாங்கரையைச் சேர்ந்த இந்திரா எஸ்தர் [60] இரண்டு மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய இவர், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிகப்பட்ட இவர், சிகிச்சைக்குப் பிறகும் டிஸ்சார்ஜ் செய்து கூட்டிச் செல்ல உறவினர்கள் வராத நிலையில் இன்று, தற்போது மருத்துவமனையில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மழையிலும், குளிரிலும், தவித்துக் கொண்டிருக்கிறார். பத்மாவதி, சீனிவாசன், கோடிஸ்வரன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தும் தனக்கு இப்படிப்பட்ட நிலை என்று நொந்துப் போய் கூறுகிறார், எஸ்தர். இது போன்ற பிள்ளைகளை முதியோர் பராமரிப்புச் சட்டத்தில் தண்டிப்பதுதான் இந்திரா எஸ்தர் போன்றோரை காப்பாற்ற சிறந்த வழி
பவள சங்கரி திருநாவுக்கரசு
தேதி - 09 - 11 - 2010.
நன்றி - தின மலர்.