சேப்பங்கிழங்கு கறி
- எல்லா கிழங்கு வகைகளைப் போலவே பகலிலே உண்ணலாம். வாங்கும் போது கெட்டியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். நிறைய மண் இருக்கும் - 2 -3 முறை நன்றாக அலம்ப வேண்டும்.
- முழுகும் அளவு தண்ணீருடன் cooker-ல் வேக வைக்கவும். எடுத்து ஆறியவுடன், நீரை வடித்து விட்டு, தோலை நீக்க வேண்டும்.
- சிறு சிறு துண்டுகளாக அரியவும்.
- அடி கெட்டியான கடாயில், 4 spoonகள் எண்ணெய் பரவலாக விடவும். சூடானதும், 1/2 spoon கடுகு சேர்த்து தாளித்து, 1/2 spoon மஞ்சள் பொடி, 1 spoon மிளகாய்ப்பொடி, பொடி உப்பு, கறிவேப்பிலை 10, 1 spoon தனியா பொடி (பிடிக்குமென்றால்) சேர்த்து, கலந்து, பின் அரிந்து வைத்துள்ள கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
- தணலை மெதுவாக வைத்து, நன்றாக சிவக்குமாறு செய்து, தோசைத்திருப்பி கொண்டு சில நிமிடங்களுக்கு ஒரு முறை திருப்பி விடவும்.
- நன்றாக roast ஆனதும், சூடாகப் பரிமாறவும்.
இதை கந்தரப்பத்தோடு சாப்பிட்டால், நிச்சயமாக உண்ட களைப்பிருக்கும் :))
-ஸ்வர்ணா lakshmi_ssri@yahoo.com