சூரிய நமஸ்காரப் பதிகம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Sunsalutations.jpg
வீதிவெளி யாகாச மீதிற் பிரகாசமாய் மெய்ஞான தீபச் சுடராய்
வெளியாகி ஒளியாகி விந்துசுழி முனைமீதில் விளையாடும் ஓங்காரமாய்
ஓதுமுத லைந்தெழுத் துபதேச மந்திரம் உரைக்கின்ற சற்குருவுமாய்
உருவாகி உயிராகி உயிருக்குள் அறிவாகி ஊடாடி நின்ற உணர்வாய்
ஆதிமுத லானவளரன் டபகி ரண்டங்கள் ஆயிரத் தெட்டுமாகி
அறுநூற்றிருபத்து நாலு புவனங்களும் ஆண்ட மயமான நிறமாம்
சோதிமய மானபரி பூரணவிலாசமிகு சூட்சும ரதமே றியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர சூரி நாராயண சுவாமியே !
உத்ரமிகும் அக்கினி சொரூப வடிவாகிய ஓங்கார ரூபமாகி
ஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில் உதிக்கின்ற தெய்வமாகிச்
சகல புவனங்களும் தானாகி நின்றவொரு சச்சிதானந்த மயமாய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய சகல சூட்சும தாரியாய்
விக்கிர சிவலிங்க வடிவாக வுமிகுந்த சதுர் வேதாந்த முத்தி முதலாய்
வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன் வேதனே பர நாதனே
சுக்ரகெம் பீரபரி பூரண விலாசனே சுயம்புரத மீதேறியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர சூரி நாராயண சுவாமியே !





நன்றி விதூஷ் (எ) ஸ்ரீ வித்யா


பகிர்ந்தது எல்கே


--Geetha Sambasivam 08:10, 4 ஜூன் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=சூரிய_நமஸ்காரப்_பதிகம்&oldid=9053" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 21 டிசம்பர் 2011, 00:50 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,496 முறைகள் அணுகப்பட்டது.