சித்தர் வழியில் 17 கருவூர்ச் சித்தர் 2மரபு விக்கி இருந்து“ஏ… தாசிப்பெண்ணே… இந்த இரத்தினப் பதக்கம் உன்னிடம் எப்படி வந்தது?.
’’எனக்கு ஒருசித்தர் கொடுத்தார்” ’’இது முழுப்பொய். இது பெருமாளுடைய இரத்தினப் பதக்கம். யாரும் அறியா வண்ணம் நீ திருடிவிட்டு பொய்யான நாடகம் ஆடுகிறாய்? ’ சித்தர் பெருமானே! இதென்ன எனக்கு சோதனை.’’ என்று தாசி நினைத்த மாத்திரத்தில் கருவூர் சித்தர் அங்கு வந்தார். ‘’ இதோ இவர்தான் எனக்கு இந்த இரத்தினப் பதக்கம் அளித்தார்.” என்று கருவூர்ச் சித்தரை அடையாளம் காண்பித்தாள் தாசி
கோயில் அதிகாரிகள் இப்போது கருவூரார் பக்கம் திரும்பி அவரை ஏற இறங்கப் பார்த்தனர். “ உனக்கு எப்படி இந்த இரத்தினப் பதக்கம் கிடைத்தது? என்று அவரைக் கடுமையாக விசாரித்தனர்.“ அதோ அந்தப் பெருமாளிடமே கேட்டுக் கொள்ளுங்கள் “ என்று கருவூரார் ஆகாயத்தைக் காண்பிக்க ஆகாயத்தில் பெருமாள் தரிசனம் தந்து, “நாமே அந்த இரத்தினப் பதக்கத்தை அவருக்கு தந்தோம்” என்று கூறி மறைந்தார்
அதன் காரணமாகவே சிற்பிகள் மனம் நடுங்கி புலம்பிக் கொண்டிருந்த போது அங்கே கருவூர் சித்தர் வந்து சேர்ந்தார். ”ஏன் இப்படி நெஞ்சம் பதைபதை நிற்கிறீர்கள்? உங்கள் கலக்கத்தை நான் போக்குகிறேன். நீங்கள் எல்லோரும் சற்று வெளியே சென்று இருங்கள்.நான் சிலையை வார்த்துத் தருகிறேன்.” என்று கருவூரார் சொன்னதும் யாவரும் வெளியே சென்றனர். கருவூரார் பொன்னை உருக்கி அதில் ஒரு துளி செந்தூரத்தைப் போட்டார். அதன் பிறகு அதனை அச்சில் வார்த்தார். அச்சிலிருந்து வார்த்து எடுக்கப்பட்ட நடராஜர் சிலையைக் கண்டு எல்லோரும் வியப்பெய்தினர்.சோழ மன்னன் செய்தியறிந்து ஓடோடி வந்து பார்த்தான்.தான் கனவில் கண்ட நடராஜர்
”அரசே! இந்த சிலையைச் செய்தது நாங்கள் இல்லை.இந்தக் கருவூரார்தான் செய்தார்” என்று அவரை சுட்டிக்காட்டினர். ‘அப்படியானால் அந்தக் கருவூராரைச் சிறையில் தள்ளுங்கள்’என்று சோழ மன்னன் ஆணையிட்டு சிறையில் தள்ளினான். திருமூலர் சோழ மன்னன் செய்த அபாண்டச் செயலினை கேள்வியுற்று அங்கு வந்து சேர்ந்தார். ” கருவூரார் பெருஞ்சித்தர். உனக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசையால் அவர் மீது வீண்பழி சுமத்தி விட்டாய். நீ கொடுத்த எடைக்குச் சமமாக வெள்ளியைக் கொண்டு வந்து உருக்கு’ என்று திருமூலர் கூறியதும் மன்னன் அவ்வாறே செய்தான். அப்போது உருக்கிய வெள்ளி மீது ஒரு துளி செந்தூரத்தைத் தூவப் பத்தரை மாத்துத் தங்கமாக மாறியது. .‘’மன்னா நீ ஆசை என்ற பெரிய மாயையில் வாழ்கிறாய். ஆசை போய்விட்டால் உண்மையான பரவெளியை உணர்ந்து கொள்வாய். செல்வம் யோகியை வசப்படுத்த முடியாமையால் யோகிக்கு செல்வம் வசப்படுகிறது” என்று திருமூலர் உபசேதம் செய்தார்.
இவர் பூஜை விதிமுறைகளையும் ஆதி பராசக்தியை வாலைப் பெண்ணாக முன் வைத்து அவளது மாயை முதலான கூறுகளைப் பல வடிவங்களாக்கி, அவளைச் சிறுபிள்ளைக் கன்னியாகவும், சித்தர்களின் மனவடக்கத்தையும் சோதிக்கும் சிவகாமி ரூபியாகவும்
தெளிவுதனில் தெளிவுதரு மருளுங் காணும்
கருவூர்ச்சித்தர் பல தல தரிசனம் செய்துள்ளார். ஒரு சமயம் இவர் திருநெல்வேலி சென்று நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையையும் தரிசித்துவிட்டு மானூரில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு அப்பரும், அம்மையும் நடனக்காட்சியைக் காட்டி அருளியதாக நெல்லை தல புராணம் கூறுகிறது. அந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆவணி மூலத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.கருவூரார் திருவிசைப்பா பாடிய ஒன்பது பேர்களுள் ஒருவர். திருக்கோயில் வழிபாட்டிற்கென தனி மதிப்பு கொடுக்கும் வகையில் பத்துத் தலங்களின் சிவ மூர்த்தங்களைத் துதிக்கும் 103 பாடல்கள் இயற்றியுள்ளார் அவற்றுள் இராஜராஜேச்வரம் குறிப்பிடத்தக்கது.
”உலகெலாந் தொழு வந்தெழு கதிர்பரிதி ஒன்று நூறாயிரங் கோடி அலகெலாம் பொதிந்த திருவிடம்பச்சோ அங்ஙனே அழகிதோ வரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர் வெந்திங்கள் இலைகுலாம் பதணத் திஞ்சி வழ் தஞ்சை இராசராசேச் சரத்திர்க்கே”
இவர் சித்த மருத்துவத்திற்கென நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். அவற்றுள், 1. கருவூரார் வாதகாவியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கருவூர்த் தேவர்க்கெனத் தஞ்சைப் பெரிய கோயிலின் மேல் பிரகாரத்தில் மத்தியில் தனி கோயில் உள்ளது. வியாழன் தோறும் இவரைத் தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அவரின் மகிமையை இன்றும் நமக்கு உணர்த்துகிறது
[துணை உதவிக் குறிப்பு:”இந்திய சித்தர்கள்’’ - சித்தர் பாடல்கள்,பதினென் சித்தர்கள்]
எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்
--Geetha Sambasivam 15:28, 16 மார்ச் 2011 (UTC)
|

