சித்தர் வழியில் 17 கருவூர்ச் சித்தர்!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
.
Indexsidhas.jpg
கருவூரார் போகரின் சீடராவார். கருவூரைச் சேர்ந்தவர் என்பதால் கருவூரார் என்ற பெயர் இவருக்கு வந்தது. சைவ சமயத்தைக்
கடைபிடித்த இவர் ஞான நூல்களை ஆராய்ந்தவர். சிவ யோக சித்தி அடைந்தவர். இவரது காலம் கி.பி. 11 -ம் நூற்றாண்டு.கார்த்திகை திங்கள் மிருகசீரிடம் அன்று பூச நாளில் ஆரம்பித்து வேப்பமரக் கொழுந்தைக் கிள்ளி இருபத்தேழு நாட்கள் சாப்பிட்டால்..,பாம்பு கடித்தாலும் விஷம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டால் குஷ்ட நோய் விலகும். கொழுந்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்துமூன்று விரல்களால் எடுக்கும் அளவு பொடியை தேனில் குழைத்துத் சாப்பிட்டு வந்தால் நரை,திரை, மாறும் என்கிற வேம்பின் மகத்துவத்தை முதன் முதலாகச் சொன்னவர் இவர்,


வாத காவியம், வைத்தியம், யோக ஞானம், பல திரட்டு, குருநூல் சூத்திரம், பூரண ஞானம், மெய்ச் சுருக்கம், சிவஞான போதம், கற்பவிதி, மூப்பு சூத்திரம், பூஜா விதி போன்ற பல தமிழ் நூல்களை நமக்கு வழங்கியுள்ளார். முனிவர்களால் ஞானப் பாலூட்டப்பட்டு வளர்ந்தவர் கருவூரார். தேவதச்சன் விஸ்வகர்மாவின் மகனான மயன் குலத்தில் பிறந்தவர். கருவூராரின் தாய்-தந்தை ஊர் ஊராகச் சென்று ஆங்காங்குள்ள கோயில்களில் விக்கிரங்கள் செய்து கொடுத்து வாழ்க்கை நடத்தி வந்தனர். அதில் கிடைத்த வருவாய் கொண்டு அவர்கள் முனிவர்களுக்கும்,சித்தர்களுக்கும் வேண்டிய பொருட்களை கொடுப்பது வழக்கம்.


சிறு வயதிலேயே மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர். வசியம்,மோகனம், தம்பனம், உச்சாடனம் ஆகர்ஷணம், வித்து வேஷணம், பேதனம், மாரணம் எனும் அட்டகர்ம மந்திரங்கள் கருவூராருக்கு அத்துப்படியாகியது. தாமரைக்காய் மாலையணிந்து, புலித்தோலால் செய்யப்பட்ட ஆசனத்தினை ஆலமரப்பலகை மீது விரித்து தென் மேற்குச் திசையில் அமர்ந்து ‘நவசிவாயம்’ எனும் தம்பனத்துக்குரிய மந்திரம் அந்த வயதிலேயே அவருக்கு வசியமானது.அறிந்த மந்திரம் யாவற்றையும் ஏழை, எளிய மக்கள் குறை தீர்க்கவே கையாண்டு வந்தார். சிவாலயங்களில் சிவலிங்கத்தை தங்கத்தால் உருவாக்குவதும் பாசுரம் பாடி பக்தி நெறி வளர்ப்பதுமாக ஊரெங்கும் அலைந்து திரிந்தார். சாதி,குலம், நீத்துச் சிவத்தலயாத்திரை செய்து திருவிசைப்பா பதிகங்கள் பாடி வந்தார்.சாதி சம்பிரதாயங்களைப்
புறக்கணித்தார்.


ஒருநாள் கருவூரார் முன் ஒரு காகம் தன் காலில் கவ்வியிருந்த ஒரு ஓலையை வைத்தது. ஆச்சரியத்துடன் அந்த ஓலையை வாசித்தார். ‘ நீர் உடனே தஞ்சை வந்து சேரும்’ என்ற வாசகம் இருந்தது. அந்த ஓலை தன் குருவான போகரிடமிருந்து வந்திருந்தது. தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழ மன்னனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டிருந்தது. அதனைப் போக்கவே அவரை அழைத்திருந்தார்.தஞ்சையில் இராஜராஜ சோழ மன்னன்  பிரம்மாண்டமான சிவாலயம் கட்டியிருந்தான். சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய அஷ்டபந்தனம் பலமுறை அவிழ்ந்து இளகி பந்தனம் ஆகாமல் போயிற்று. கோயிலுக்குள் நுழைந்த கருவூரார் சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்த்த போது அங்கே அஷ்டபந்தனம் செய்ய
விடாமல் ஒரு பிரம்ம ராக்ஷஸி தடுத்துக்கொண்டு நிற்பதைக் கண்டதும் மந்திர உச்சாடனம் செய்து அதன்மீது காறி உமிழ்ந்தார்.கருவூராரின் வாய் எச்சில்பட்டு தீப்பொசுங்கி பிரம்ம ராக்ஷஸி கருகியது. அதன் பிறகு அவரே அஷ்டபந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையும் அபிஷேகமும் செய்து வைத்தார்.


சிவபெருமானின் ஐந்து முகமாகிய ஈசானம், தத்புருஷம், அகோரம்,வாமதேவம், சத்தியோசதம் அண்டரண்ட மந்திரம் உபதேசித்து நிறைவு செய்தார். அண்டரண்ட மந்திரம் இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றும். பிறகு, கருவூரார் அங்கிருந்து புறப்பட்டுத் திருவரங்கத்திற்குச் சென்றார். அவ்வூரில் ஒரு தாசி இவரின் தேகப் பொலிவையும், தேஜஸையும் கண்டு கவர்ச்சியுற்று இவரை தம் இல்லம் அழைத்து
பெரிதும் உபசரித்தார். ’சித்தர் பெருமானே! இத்தகைய மோகன சிறையை நான் இதுவரை கண்டதில்லை. இதன் மர்மம் என்ன? நான் அறியலாமா’’? என்று கேட்டாள்.

DSC00038tanjorekoil.JPG

’என் நெற்றியில் உள்ள மோகன மூலிகைத் திலகம்தான் உன்னை வயப்படுத்தி உள்ளது. மோகன மூலிகையை ‘ஐயும் கிலியும் சவ்வும்’ என்ற மந்திரத்தை தினமும் நன்கு உச்சரித்துத் திலகமாய் இட்டுக்கொண்டால் மோகனம் சாத்தியமாகும்’ என்றார். இதனைக் கேட்டு தாசி வியப்பால்.விதிர்த்து ,விக்கித்து போனாள்.அதனால் களைப்பும் அடைந்தாள். அவளின் களைப்பு நீங்க, அருகிலிருந்த தென்னை மரத்தினைப் பார்த்து, ‘’பிறங்பிறங் ஷங்ரங்சிங் சிவாய நம’’ என்று கருவூரார் மந்திரம் ஓத நிமிர்ந்து நின்ற தென்னை மரம் இளநீர் பறிக்க கைக்கெட்டும்
அளவுக்கு வளைந்து நின்றது. தாசி கோமளவல்லியின் புருவம் வில்லென வளைந்து நெளிந்தது. ‘தங்களைத் தொட்டது என் பூர்வபுண்ணியம்.இந்த இரவு விடியாது இப்படியே இருக்க வேண்டும்’ என வேண்டினாள்.
‘மற்றவர்களுக்கு விடியாமல் உனக்கு மட்டும் விடியல் காண்பாய்.இந்த நள்ளிரவில் உனக்கு மட்டும் ஒளிரும் சூரியனை காண்பாய்’ என்று கூறி ,... அதோ பார்! ’சூரியனின் இரதம் வருகிறது சூரிய மண்டலத்தைக் கண் கூசாது பார்’ எனக் கூறியபடி, ‘இரக்ஷ இரக்ஷ ஸ்ரீம் சிவாய நமோ’ எனும் மந்திரத்தை கருவூரார் உச்சரித்தார்.மறுநாள், கோமளவல்லியிடம் விடைபெற எழுந்தார். கருவூராரைப் பிரிய மனமின்றி வருந்தி நின்ற தாசியிடம் ‘நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன், என வாக்குறுதி தந்தார். அரங்கநாதப் பெருமானை தரிசித்து, பெருமாள் தனக்களித்த இரத்தினப் பதக்கத்தை அன்பளிப்பாய் கோமளவல்லிக்கே அன்புப் பரிசாக அளித்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றார். தாசி கோமளவல்லி ஒருநாள் அந்த இரத்தினப் பதக்கத்தைப் போட்டுக்கொண்டு வெளியே வர கோயில் அதிகாரிகள் அவளைக் கையும், களவுமாகப் பிடித்துக்கொண்டார்கள்.
Imagestanjore.jpg


எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்

--Geetha Sambasivam 13:23, 16 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2011, 04:59 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,710 முறைகள் அணுகப்பட்டது.