சரும‌த்தை‌‌ப் பொ‌லிவா‌க்கு‌ம் ஆவாரை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

* சரும‌த்தை‌‌ப் பொ‌லிவா‌க்கு‌ம் ஆவாரை


தைப்பொங்கல் அன்று வீட்டு வாசல்களில் கட்டப்படும் தோரணமாகவும், பசு, எருதுகளுக்கு அணிவிக்கப்படும் மாலையாகவும் ஆவாரை பயன்படுத்தப்படுகிறது.


மஞ்சள் நிறத்தில் பூ பூக்கின்ற ஆவாரை நவக்கிரகங்களில் ஒருவரான குருவிற்கு உரிய மூலிகையாகும். ஆவாரை‌யி‌ன் அனை‌த்து பாக‌ங்களு‌க்குமே மரு‌த்துவ குண‌ம் உ‌ள்ளது.


ஆவாரை இலை, பூ, காய், பட்டை, வேர் இவை ஐந்தையும் சூரணமாக்கி, அதில் 3 பங்கு எடுத்துக் கொள்ளவும்.


இதேபோல், கோரைக்கிழங்கு சூரணம் ஒரு பங்கு, கிச்சிலி கிழங்கு சூரணம் ஒரு பங்கு கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக இதனை தேய்த்துக் குளித்துவர உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் தீரும்.


தேமல், சொறி, தினவு போன்ற சரும பா‌தி‌ப்பு இரு‌ப்பவ‌‌ர்களு‌ம் இதனை‌ப் ப‌ய‌ன்படு‌த்‌தி கு‌ளி‌க்கலா‌ம். இ‌‌வ்வாறு கு‌ளி‌த்து வர‌ சரும‌ம் புது‌ப்பொ‌லிவு பெறு‌ம்.


ஆவாரை இலையுடன் பூவரச மர வேர்ப்பட்டை, சிறிது உப்பு சேர்த்து அரைத்து அதை தண்ணீரில் கலந்து குளித்து வர, உடலில் ஏற்படும் அரிப்பு குணமாகும்.



--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:39, 10 ஜூன் 2011 (UTC)

நன்றி - வெப்துனியா.










பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 10 ஜூன் 2011, 03:39 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,647 முறைகள் அணுகப்பட்டது.