சிங்கை கிருஷ்ணன்
கொ
கொடிக்குக் காய் கனமா?
கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சுவானா?
கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
கொல்லைக் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
கோ
கோட் சொல்பவனைக் கொடுந் தேள் என நினை.
கோத்திரமறிந்து பெண்ணைக்க் கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
கோபமுள்ள இடத்தில் குணமும் உண்டு.
கோபம் சண்டாளம்.
கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
கோளுஞ் சொல்லிக் குடுபிடுவானேன்?
ச.
சண்டிக் குதிரைக்கு நொண்டிச் சாரதி.
சத்தியம் வெல்லும், அசத்தியமே கொல்லும்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைத்து ஆவது என்ன?
சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
சவதியில் [சேற்றில்] கல் எறிந்தால் முகத்தில். தெறிக்கும்.
அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 17:53, 4 அக்டோபர் 2011 (UTC)