சிங்கை கிருஷ்ணன்
கா.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காடு காத்தவன் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
காடு வா என்கிறது வீடு போ என்கிறது.
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
காணி ஆசை கோடி கேடு.
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே.
காப்பு சொல்லும் கை மெலிவை.
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
காரியம் தெரிதோ வீரியம் பெரிதோ?
காலையில் கல்லு மாலைப் புல்லு
காற்று உள்ள போதே தூற்றிக்கொள்.
கி
கிட்டாதாயின் வெட்டென மற
கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்ந்தான்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
கீ
கீர்த்தியால் பசி தீருமா?
கீறி ஆற்றினால் புண் ஆறும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:14, 27 செப்டெம்பர் 2011 (UTC)