--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]
படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
[1] கீழ்வரும் கல்வெட்டு உடுமலை அருகிலுள்ள கடத்தூர் மருதீசர் கோயிலில் உள்ள தூண் கல்வெட்டு. தூணின் மூன்று சதுரங்களில் மூன்று பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எளிமையான ஒரு கல்வெட்டு. ஒளிப்படத்தை அவரவர் தேவைக்கேற்பப் பெரிதாக்கி எழுத்துகளைப் படித்துப்பார்க்க.
தூணின் முதல் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி
தூணின் முதல் சதுரத்தின் பாடம்:
ஸ்வஸ்திஸ்ரீ
வீரசோழ தே
வற்கு யாண்
டு பத்தொன்
பதாவது
தூணின் இரண்டாம் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி
தூணின் இரண்டாம் சதுரத்தின் பாடம்:
வெள்ளப்ப நா
ட்டுத்தேவி
யர் சேரியில்
கோளந் இரா
மநாந அழ(கி)
ய மாணிக்கப்
பல்லவரைய
தூணின் மூன்றாம் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி
தூணின் மூன்றாம் சதுரத்தின் பாடம்:
நேந் இத்தூண்
செய்வித்தேந்
___________________________________________________________
து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________