உமா சண்முகம்
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1கப்
பொட்டுக் கடலை – 4 ஸ்பூன்
முட்டை – 2
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
செய்முறை:
1. கடலைப் பருப்பையும் பச்சரிசியையும் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊற வைத்த அரிசியுடன் பொட்டுக் கடலையையும் சேர்த்து அரைக்கவும்.
3. அரைத்த கலவையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், முட்டை, உப்பு, மஞ்சள்த் தூள் சேர்த்து கலக்கவும்.
4. தோசைக் கல்லில் சன்னமாக ஊற்றி, காரச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.