ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டுமரபு விக்கி இருந்துஆர்.பன்னிருகைவடிவேலன்
மஞ்சிகன் என்பவரால் எழுதப்பட்டது இந்நூல். இது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்குரிய தாவரங்களைப் பற்றிக் கூறும் சிறிய நூல். - ஆசிரியர் ஆகியன பற்றி இந்நூல் "ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு" எனப்பெயர் பெற்றது. இதன் பெயர் சிறு நிகண்டு என்று இருப்பதால், இவ்வாசிரியர் இயற்றிய பெருநிகண்டு ஒன்று இருந்திருக்கக்கூடும் என எண்ணத் தோன்றுகிறது. நமக்குக் கிடைக்கிற நூல்கள் அனைத்திலும், - கடவுள் வாழ்த்து போன்றவற்றால் ஏதாவது ஒன்று நூலின் தொடக்கத்தில் அமைந்திருக்கும். நிகண்டு நூல்களுள் இதைக்காண முடிகிறது. இந்நிகண்டில் இவைகளில் ஒன்றும் காணப்படவில்லை. இதற்குக் காரணம், அவை கிடைக்கப்பெறவில்லையா? மஞ்சிகன் என்பவர் இயற்றிய பெருநிகண்டு என்னும் ஒன்றின் தொடர்ச்சியாக இது அமைந்ததா? என அறிய இயலவில்லை. இந்நிகண்டு மாகறல் தி.பொன்னுசாமி முதலியாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளதை இவர் தமது முன்னுரையில், மாகறல் கார்த்திகேய முதலியாரிடமிருந்து இந்நிகண்டு கிடைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், - கொல்லிமலை நிகண்டு ஆகிய நிகண்டுகள் வெளிவராமல் போனதைப்போன்று மஞ்சிகன் ஐந்திணைப் பெருநிகண்டு ஒன்று இருந்து வெளியிடப்படாமல் போயிருக்கும் என்று பதிவு செய்துள்ளார். இந்நிகண்டு பதிப்பிக்கப்பட்ட காலம் பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்கவில்லை. இந்நூல், எளிதில் மனனம் செய்வதற்கு ஏற்றவாறு 122 ஓரடி நூற்பாக்களைக் கொண்டுள்ளது. மரங்களின் பெயர்களையும் பிற தாவரங்களின் பெயர்களையும் கூறுகிறது. இந்நூலில் 122 மரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மரத்துக்கும், - பெரும்பான்மை 2 பெயர்களும் (தடவம், தணக்கு - 56) என மூன்று பெயர்கள் வரை சுட்டியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும், மருத்துவ குணமிக்க மரங்களையும் வாசனைப் பொருள் மிகுந்த மரங்களையும் குறிப்பிடுகிறதேயன்றி, அவற்றின் பயன்பாடு பற்றிக் கூறப்படவில்லை. - பிரம்பு ஆகிய மரங்களின் பெயர்களை இந்நூல் பட்டியலிட்டுள்ளது. செடிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் கீரைவகைகள், கொடிவகைகள், மூலிகைகைள் அடங்குகின்றன. - மூலிகை (ஒடதி, ஒடதம்) ஆகிய மூலிகைச் செடிகளின் பெயர்களையும், - சிறுகீரை ஆகிய கீரை வகைகளும் கூறப்பட்டுள்ளன. - நறுவிலி ஆகியனவும், - உம்பிலம் ஆகிய கொடிவகைகளின் பெயர்களும் காணப்படுகின்றன. - திவாகரம் ஆகிய இரண்டு நிகண்டுகள், மரப்பெயர்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால், இந்நிகண்டு கூறியுள்ள அனைத்தும் அவற்றில் இல்லை. சான்றாக இந்நிகண்டு தென்னையின் பெயரைக் குறிப்பிடும்போது, - நாலிநாரி என்கிறது. ஆனால், - திவாகரம் என நவில்வர் (திவா.702) என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிகண்டினை வேறு நிகண்டுகளின் மரப்பெயர்த் தொகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புதிய செய்திகள் பல புலப்படும். திவாகரம், பிங்கலம் ஆகியவற்றோடு பொருத்திப் பார்த்ததில் மாறுபட்டும், வேறுபட்டும், புதியதாகவும் இந்நூலின் கருத்துகள் தோன்றியுள்ளதைக் காணமுடிகிறது. ஒவ்வொரு நூற்பாவும் ஆகும், எனப்படும், எனப்படுமே என்று முடிவதாக அமைந்துள்ளது. இந்நூலில் மரத்தின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளனவேயன்றி, பொருள் புரிந்து விளங்கிக்கொள்ளும் அளவிற்குரியதான பதிப்புகள் வரவில்லை! இந்நிகண்டில் கூறியுள்ள பெயர்களைக் கொண்டு இன்று, இப்பெயர்கள் வழக்கில் இல்லை என்பதை அறிய முடிகிறது. உச்சரிப்பு ஒலியனின் வேறுபாட்டால் புதுப்பெயர்கள் அறிமுகமாகின்றன. நிகண்டு வளர்ச்சி வரலாற்றில் மரப்பெயர்களுக்குரிய தொகுதியாக விளங்குவதால் இந்நிகண்டும், நிகண்டு வளர்ச்சி வரலாற்றில் ஒரு பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி:- தினமணி --Ksubashini 14:44, 6 ஆகஸ்ட் 2011 (UTC) |