எழுதியவர்: திருமதி.கீதா சாம்பசிவம்
எள்ளுப்பொடிக்கு இரண்டு பேருக்கு, எள் ஐம்பது கிராம், கறுப்பு எள்ளே ருசி, வாசனை, மிளகாய் வற்றல் இரண்டு அல்லது மூன்று, கல் உப்பு. மூன்றையும் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
சாதம் உதிர் உதிராக வடித்து நல்லெண்ணெய் விட்டு அரை தேக்கரண்டி உப்புச் சேர்த்து ஆற வைத்துப் பின் எள்ளுப் பொடியைப் போட்டுக்கலக்கவும். தொட்டுக்கொள்ள மோர்க்குழம்பு அல்லது மோர்க்கூட்டு நல்ல காம்பினேஷன்.