சிங்கை கிருஷ்ணன்
இ
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இஞ்சி இலாபம் மஞ்சலில்
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இருந்த கால் மூதேவி, நடந்த கால் சீதேவி.
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
இருவர் நட்பு ஒருவர் பொறை.
இல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
இளங்கன்று பயமறியாது.
இளமையிற் சோம்பல் முதுமையில் இன்மை
இல்லற மல்லது நல்லற மன்று.
இறங்கு பொழுதில் மருந்து குடி.
இறுகினால் களி, இளகினால் கூழ்
இறைத்த கிணறு ஊறும், ஈயப் பெருகும் செல்வம்.
இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்.
இனம் இனத்தோடு, வெள்ளாடு தன்னோடே.
இன்று இருப்பார் நாளை இல்லார்.
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக் குலை அறுப்பான்
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:51, 27 செப்டெம்பர் 2011 (UTC)