இந்திய மெய்யியல் - ஒரு கண்ணோட்டம்.

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


தொன்மையான இந்திய மெய்யியல் வரலாறை அறிந்து கொள்ளும் போது இந்திய.                                உள்ளத்தின் பரிணாம வளர்ச்சியையும் (evolutionary history) புரிந்து கொள்ள 
முடிகிறது. முடிந்த அளவு, இந்திய மெய்யியல் ஞானிகள் மெய்யியல் புரிதலை
(ஞானத்தை) எல்லோரும் சுதந்திரமாக அணுகும் வண்ணம் திறந்த புத்தகம் போல்
அமைத்தது மட்டுமல்லாது, இறைவனை அடைவதற்கான வழியில் அளப்பரிய
சுதந்திரத்தையும் அள்ளி வழங்கி உள்ளனர்


 இந்திய மதம் என்றொன்று “இந்து மதமாக” ஸ்தாபனப் பட முடியாமல்.                                                          இன்றுவரை இருப்பதற்கான அடைப்படைக் காரணி இந்த பரந்த,                                                       சுதந்திர,மனப்பான்மைதான். எப்படி மனிதர்கள் ஒவ்வொருவரும்
வெவ்வேறாக உள்ளோமோ, அதுபோல் நாம் வழிபடும் வழிகளிலும் கிளைகள்
இருப்பதை நம் மூதாதையர் புரிந்து அனுமதித்து உள்ளனர். அதன் வௌ¢ப்பாடுதான்,
இந்தியர்கள் வழிபடும் பல் தேவதை வழிபாடுகள் (இஷ்ட தேவதா நிஷ்டை).


 
எப்படி ஆறுகளின் தோற்றுவாயும், வழியும் வேறு பட்டு இருந்தாலும் இறுதியில் கடல் என்ற
ஒன்றில் கலக்கிறதோ அதுபோல் பல்வேறு வழிபாட்டு முறைகளும் இறைமை என்ற
ஒன்றில் கலப்பதை அறிந்து, உணர்ந்திருந்தனர் நம் முன்னோர்கள். இருபதாம்
நூற்றாண்டின் பரிணாமவியல் விதியின் படி வேற்றுமை விரிந்து இருக்கும் போதுதான்
உயிர்த் தொடர்ச்சி காலத்தை வெல்கிறது. (variation is the basis of evolution).
இந்திய மெய்யியல், இன்றளவும் காலத்தை வென்று நிற்பதற்கு அதன் பல நோக்கு
அணுகு முறைதான் காரணம் என அறியலாம்


.

 - 

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 11 நவம்பர் 2010, 07:51 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 6,812 முறைகள் அணுகப்பட்டது.