அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 9:2மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
இன்று அன்றைய தினமல்ல. என்றைய தினமே. கொரியாவில் இன்றைய தினம் தொடங்கி, அநேக வணிக மையங்கள் மூன்று நாட்கள் விடுமுறை, விழா எடுக்க: நன்றி நவிலும் விழா. எனக்கு தெரிந்த உச்சரிப்பில் ‘சுசியோக்’/‘ஹங்கவி’ என்கிறேன். மண் வாசனை நுகர, மக்கள் முன்னோர்களின் வாழ்விடம் சென்று அவர்களுக்கு நன்றி நவில்வதில் ஆர்வம், விருந்து, ‘ஹன்போக்’புத்தாடைகள், தொழுகை எல்லாம். சமாதிகளுக்கு சென்று, அங்கு ‘புல்சோ’ என்ற உழவாரப்பணி செய்து,முன்னோர்கள்க்கு ‘சார்யெ’ என்ற சடங்கு செய்து, ‘கங்கங்ஸுலெ’ நடனமாடி, தொழுகை, பிறகு விருந்து.‘ஸாங்ப்யோஞ்’ இல்லாத விருந்து விருந்தல்ல. நாம் திதி சடங்கு செய்யும்போது முக்கனிகளும், முன்னோருக்கு பிடிக்கும் உணவு படையல் வைப்பது போல, மீன், சாதம், சூப்பு, ஜப்செ, பழங்கள் எல்லாம் படையல். கொள்ளுத்தாத்தாவின் படத்தை வைத்து, அவரது, மற்ற முன்னோர்கள் அருமை சாற்றி, அளவளாவுவோம்.
பழம்பெருமையை உணர்த்தும் தபால் தலை கீழே. உசாத்துணைகள், அபாரம்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:50, 11 செப்டெம்பர் 2011 (UTC) |
