அன்றொரு நாள்: பிப்ரவரி 1மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
வர வர மறதி ஏறிண்டே வரது. ஒரு கமலஹாசன் படத்தில், அவர் ஒரு அழகிய பெண்ணை ‘அபேஸ்’ பண்ணிண்டு கானகத்தே சென்று விடுவார். கூடிய சீக்கிரத்தில், அவளும், அவரிடம் மையல் கொள்வாள்். (நாகராஜன் ஃபில்ம் காட்டுவாராக.) ஆனால், ஒரிஜினல் நிஜக்கதையின் கதாநாயகி ‘பேட்டி’ என்ற குட்டி. கோடானுகோடீஸ்வரளாத்துப் பொண்ணு. 19 வயசு. ‘செல்வன்’ புகழ் துப்பாக்கித் தாங்கி கொள்ளையடிச்சுட்டாளே; அங்கே பயங்கர அடிதடி விழுந்ததே. காலை 9 40: 15 04 1974. சான் ஃபிரான்ஸிஸ்கோவில் இவர்கள் குடும்பம் நிறுவிய ஹைபர்னியா வங்கியிலேயே பத்தாயிரம் டாலர் லூட் அடிச்சாங்க. இரண்டு மாதம் முன்னால் காணாமல் போன பாட்ரீஷியா காம்ப்பெல் ஹெர்ஸ்ட் என்ற இதழ் முதலாளியின் பேத்தி தான், அவள். சிம்பியானஈஸ் என்ற பயங்கரவாதிகளின் அமைப்பு அவளை இரண்டு மாதங்கள் முன்னால் அவளுடைய வீட்டிலிருந்து கடத்தினார்கள். சிறையில் இருந்த அவர்களின் ஆட்களை விடுவிக்கும் பேச்சு வார்த்தை பயனில்லாமல் போகவே, அவர்கள் கேட்டபடி, ஹெர்ஸ்ட் குடும்பம் 400 மிலியன் டாலர் செலவழித்து ஏழைகளுக்கு இலவச வினியோகம் செய்தும், அவளே அதில் குற்றம் குறை சொல்லி, அந்த இயக்கத்துடன் தான் ‘தனியா’ என்ற பெயரில் இணைந்து விட்டதாக அறிவித்தாள். அந்த இயக்கத்தின் தலைவன் டிஃப்ரீஸ் அவளுடைய மனதை மாற்றியதை பற்றி அலசிய உளவியல் அறிஞர்கள் கவனித்தது:
அமெரிக்காவில் சட்டம் யாரையும் லேசில் விடாது: நிஜக்கறுப்பு! இவளை சிறைவைக்கும்போது, தன்னை நகர்ப்புற பயங்கரவாதி என்று அறிவித்துக்கொண்டாள். தன் நலம் நிறைவு என்றாள். வழக்கின் போது, புகழ் வாய்ந்த ‘போர்க்கைதி உளவியல்’ வல்லுனர் மார்கெரட் சிங்கர் என்பவர்,மூளைச்சலவையை பற்றி விலாவாரியாக அலசி, இது நடக்கக்கூடியது, தெரிந்த பின்னணியில், அவளுக்கு சகஜ நிலை திரும்ப சாவகாசம் தேவை என்றார். இந்த வக்ரமாக மாறிய நிலைக்கு “ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரோம்” என்று பெயர் என்றார். அரசு டாக்டர் வெஸ்ட் அவர்களும், மற்றும் சில வல்லுனர்களும் அதை ஆதரித்தார்கள். டாக்டர் வெஸ்ட், இது சைனாவின் மா சே துங்கின் ‘சிந்தனைச்சிறையின்’ ஒரு பரிமாணம் என்றார். துணிச்சல் மிகுந்த போர்வீரர்களையே கட்டுப்படுத்தும் இந்த பயங்கரத்தின் முன்னே, இந்த யுவதி என் செய்ய இயலும்? என்று வாதாடினார். கேட்பார் இல்லை. எதிர்வாதமும் பலே, பலே. எதற்கும் ‘அன்றொரு நாள்: ஜனவரி:21அண்ணாச்சி!’
மார்ச் 20, 1976 அன்று, பேட்டி 35 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாள். பிறகு அது ஏழு வருடமாக குறைக்கப்பட்டது. எல்லா கோணங்களையும் ஆராய்ந்து, ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அவர்கள், தண்டனையை போதும் என்று சொன்னார். அவளும் 22 மாதங்கள் சிறையில் இருந்த பின் ஃபெப்ரவரி 1,1979 அன்று விடுவிக்கப்பட்டாள். தன் மெய்க்காப்பாளர் பெர்னார்ட் ஷாவை திருமணம் செய்து கொண்டு, இரு குழந்தைகளுடன் ந்யூ யார்க்கில் வாழ்கிறார். ஜனவரி 20, 2001 அன்று, ஜனாதிபதி பில் க்ளிண்டன் அவளுக்குப் பூரண மன்னிப்பு வழங்கிவிட்டார்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 07:52, 5 பெப்ரவரி 2012 (UTC) |