அன்றொரு நாள்: ஜூலை 29மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
சில நாட்கள் ஏற்புடைய தகவல்கள் கிடைப்பதில்லை. சில தேதிகளில் பிரமுகர்கள் பலரை பற்றி எழுதவேண்டியிருக்கிறது. இன்றைய பட்டியலின் மூவரும் மிக வித்தியாசமானவர்கள். ஒருவர் நாசகாரி; மற்றொருவர் நாசத்தின் பலி; மூன்றாவது நபர் நாசம் என்ற சொல்லை அறியாதவர். இது நான் கேள்விப்பட்டது. சர்ச்சிலுக்கும், அவரது மகனுக்குமோ/ மாப்பிள்ளைக்குமோ ஒரு நாள் பலத்த வாக்குவாதம். சர்ச்சில் சொன்னாராம், ‘என்னை விட முஸோலினி தான் மேல். அவன் மாப்பிள்ளையையே சுட்டுப்பிட்டான் இல்லையா!’ என்று. இன்று அந்த கொடுங்கோலன் பிறந்த நாள், 1883. பாசிஸிசத்தை 1919ல் அறிவித்து, ‘கறுப்புச்சட்டை’ படைகளை குவித்து, இத்தாலி நாட்டின் குடியரசு பண்புகளை ஒழித்து, 1925ல் தன்னை சர்வாதிகாரியாக பிரகடனம் செய்து கொண்டான். இருபது ஆண்டுகள் நாட்டை கொடுங்கோல் ஆட்சியினால் குலைத்தது போறாது என்று எதியோப்பாவை 1935ல் கைபற்றினான். இந்த அட்டூழியத்தை பார்த்து, வாளாவிருந்தது அகில உலக அமைப்பு (The League of Nations). பிறகு, ஜெர்மனியின் ஹிட்லருடனும், ஜப்பானின் டோஜோவிடனும் கூடாநட்பு, இரண்டாம் உலக யுத்தத்தில். நிஜமாகவே மரண அடி. கொடுங்கோல் தாங்காமல், இவனுடைய கை தாழ்ந்தவுடன், இவனுடைய ஆட்களே, மக்களுடன் சேர்ந்து கொண்டு, இவனை சுட்டுத்தள்ளினர், ஏப்ரல் 22, 1945 அன்று. சடலத்தை தலைகீழாகத் தொங்கவிட்டு, கற்களால் அடித்தனர் என்று, அன்று படித்ததாக, ஞாபகம். ‘Tomorrow we shall meet, ‘காலதேவன் வந்தெ ன்னை தழுவுவான் நாளை. அகாலத்தில் குத்திக்கிழிப்பான் விழித்திருக்கும் என்னை...’ அப்படியே நடந்ததே! இவரும், பதினைந்து பேர்களும் சென்ற விமானம், செப்டம்பர் 17/18, 1961 அன்று நொறுங்கியது. அனைவரும் மரணம். இது விதியா, இல்லை, சதியா? இன்றும் மர்மாக இருக்கிறது. உண்மையிலேயே, இவர் தலைமாந்தர் என்பதுடன், அவரது தந்தையும், பல துறைகளில் தலைமாந்தராகத் திகழ்ந்ததையும் குறிப்பிடவேண்டும். தந்தை இவருக்கு சொன்ன மந்திரம், “ நம் வம்சமே பணி செய்யும் வம்சம். தன்னலமற்ற தேசாபிமானமும், மனித நேயமும் முன்னுரிமை பெற வேண்டும். அதற்காக ஆசாபாசத்தைத் துறந்து, அசாத்திய துணிச்சலுடன் தனது கோட்பாடுகளை காப்பாற்றிக்கொள்ளவேண்டும். அன்னையின் ஆணை, ‘இறைவனுக்கு முன் நாம் எல்லாரும் சமம் என்று செயல்படு’. அத்தகைய உயர்குடும்பத்தில் இவர் ஜனித்த தினம், ஜூலை 29, 1905. பிறந்த நாட்டின் பிரதமர் தந்தை. சர்வ தேச மன்ற நீதிபதியாகவும், உலகப்புகழ் வள்ளல் மன்றம் ஒன்றின் தலைவராகவும் புகழ் ஈட்டியவர். இவரும் கல்விதுறை, மத்திய வங்கி, நிதி அமைச்சரகம் எல்லாவற்றிலும் உயர்பதவிகள் வகித்த பின்னர், வெளி நாட்டு உறவு அமைச்சரகத்தில் ராஜதந்திரியாக பணி புரிந்த பின், தன் தேசத்தின் பிரிதிநிதியாக ஐ.நா.வில் திறம்பட தொண்டாற்றி, அந்த அமைப்பின் தலைவராக 1953லும், மறுபடியும், 1957லும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இந்த ஸ்வீடன் நாட்டின் மைந்தனும், உப்பஸாலா பல்கலைக்கழக மாணவரும் ஆன திரு. டாக் ஹாம்மெர்ஷீல்ட். அவருடைய சாதனைகள் பல: சைனாவிடமிருந்து, அமெரிக்க சிப்பாய்களை மீட்டது;
முந்தி இருப்பச் செயல்.
கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு மேல் ஸர் டோராப்ஜீ டாடா அறக்கட்டளை மூலம் எத்தனை விதமான தர்மங்கள்! - புற்றுநோய் நிவாரணம், சமூகவியல் உயர்கல்வி/ஆய்வு, உலகத்தரம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சி, நுண்கலை மன்றம் இத்யாதி. எனக்கு கொடுப்பினை, இவை யாவற்றையும் அருகில் இருந்து பார்க்க முடிந்தது.
தொழிலாளர்களின் நலனில் இவர் காட்டிய அக்கறை: பேச்சுரிமை, எட்டு மணி நேர வேலை, இலவச மருத்துவம், சேமிப்பு உதவி, விபத்து நிவாரண உதவி ஆகியவை. அவை சட்டரீதியாக வந்த உரிமைகளுக்கு முன்னோடி. இவர் கொனர்ந்த உன்னதமான கோட்பாடு: ஒரு தொழிலாளி இல்லத்தை விட்டு வேலைக்கு கிளம்பிய உடனேயே பணியில் அமர்ந்ததாக பதிவு. இது பெரிய விஷயம். வழியில் விபத்து நேர்ந்தால், நிவாரணம் கம்பெனியிடமிருந்து.
சுருங்கச்சொல்லின், ‘ஜேஹ்’ ன் நற்பண்புகள், சிநேகிதம், இணக்கம், செய்வன திருந்தச்செய்தல் போன்ற குணாதிசயங்களை வானளாவ புகழ்வது, கேசுப் மஹீந்தரா, மற்றொரு தொழிலதிபர். நவம்பர் 29, 1993 அன்று இவரை இழந்தோம்.
இன்னம்பூரான் 29 07 2011 http://www.glogster.com/media/1/4/11/21/4112140.jpg
உசாத்துணை:
http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1961/hammarskjold-bio.html#not_3 http://www.india-today.com/itoday/millennium/100people/tata.html
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 15:19, 1 ஆகஸ்ட் 2011 (UTC)
|


