அன்றொரு நாள்: ஜூன் 4மரபு விக்கி இருந்து
இன்னம்பூரான்
பல நாட்களுக்கு பிறகு, ராஜம் கொடுத்த உந்துததலால், இந்த இழையை மறுபடியும் தொடங்கும் போது பல சஞ்சலங்கள். விட்ட குறையை நிரவமுடியுமா? ராஜம் எழுதிய மாதிரி ஜனரஞ்சகமாக எழுத முடியுமா? அல்லது ஷைலஜாவுடன் வரலாறு படைப்பதில் போட்டி போடமுடியுமா?
அதெல்லாம் இருக்கட்டும். இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் கிட்டங்கியிலிருந்து ஒரு புகைப்படம் இணைத்திருக்கிறேன். அதில் இருப்பவர்கள் யார்? யார்? சொல்லவும். தமிழ்நாடு அரசியலில் முன்னணி நட்சத்திரங்களான ஈ.வே.ரா., ராஜாஜி, திரு.வி.க., சர்க்கரை செட்டியார், எஸ்.சீனிவாச ஐயங்கார் இப்படிப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் நாயுடு. இன்று டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு அவர்களின் 125 ஜன்மதினம். ஹிந்து இதழில் அவரை பற்றிய நீண்ட கட்டுரை வந்துளது. அவர்கள் சொல்ல மறந்தது ஒரு நிகழ்வு. வருமான வரி கட்ட மறுத்து சத்யாக்ரஹம் செய்த அவருடைய ஸ்தாவர, ஜங்கம சொத்துக்களை ஜப்தி செய்தது, கலோனிய அரசு. அவருடைய மோட்டார் காரை ஓட்டிச்சென்றால் தான் ஜப்தி செய்ததின் அதிகார பலத்தை விளம்பரப்படுத்த முடியும். இந்திய் போலீஸ்காரன் ஒருவனாவது அதை செய்ய தயாராக இல்லை. ஆங்கிலேயே உயர் போலீஸ் அதிகாரியே ஓட்டிச்சென்றார். அவரை பற்றிய நூல் ஒன்றை பழ.அதியமான் எழுதி, அதை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுளது. அதிலிருந்து சில பகுதிகள் இணைய தளத்தில் வந்து இருப்பதால், அதை நன்றியுடன், காப்புரிமை கட்டியம் கூறி, இணைத்துளேன். தஞ்சை வே.கோபாலன் எழுதிய கட்டுரையிலும் சுவைமிகு தகவல்கள் உளன. அதையும் உசாத்துணையில் இணைத்துளேன். படித்து பயன் பெறவும். அது சரி. தலைப்பின் பொருத்தம் என்ன? யார் சொல்லப்போகிறார்கள்?
http://www.tamilheritage.org/kidangku/etayapuram/bar14.jpg
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:41, 7 ஜூன் 2012 (UTC) |