அன்றொரு நாள்: ஆகஸ்ட் 15.2மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
சிந்தனைக்களமென்று ஒன்று இல்லையெனில், மனித உரிமை உயிர் இழக்கும். மக்களாட்சி தகுதி இழக்கும். பிரதிநித்துவம் மாண்டு போகும். நானி பால்கிவாலா என்ற பிரபல வழக்கறிஞர், சிந்தனையாளர், ராஜதூதர், கொடை வள்ளல் ஒவ்வொரு வருடமும், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மத்திய பட்ஜட்டை அலசுவார். அவர் எழுதிய We, the People என்ற நூலுக்கு நான் எழுதிய மதிப்புரையை மதித்து பதில் அனுப்பினார். அவர் வழக்காடினால், நீதிபதிகள் மகுடிக்கு மயங்கிய அரவம் போல், மயங்கிடுவர் என்பார்கள். அலஹாபாத் கோர்ட்டில் இந்திரா காந்தி தோற்றபோது, அவர் அளித்த ஆலோசனை: பதவியை ராஜிநாமா செய்து, உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் செய்யவும். வெற்றி உறுதி. நான் வாதாடுகிறேன். ஆனால், இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தார். இத்தனைக்கும் நானி பால்கிவாலா அவர்கள் இந்திரா காந்தியின் அரசியல் கொள்கைகளை எதிர்த்தவர்.
இசையா பெர்லின் என்ற சிந்தனையாளரின் பிரபல கதை ஒன்றை, இது நினைவூட்டுகிறது. ‘குள்ளநரியும் பெருச்சாளியும்’ (The Hedgehog and the Fox) என்ற கதை ஆர்க்கிலோசஸ் என்ற கிரேக்கர் எழுதிய தொன்மையான கதை. குள்ளநரிக்கு எல்லாம் தெரியும். ஆனால், பெருச்சாளிக்கு ஒரு பெரிய விஷயம் நன்றாகவே தெரியும் என்பது மையக்கருத்து. நாம் நினைப்பது போல அவை தந்திரத்துக்கும், சுரண்டலுக்கும் உவமை அல்ல. அவருடைய சிந்தனையும் அதை பற்றிய அலசல்களும் பல நூறு பக்கங்கள். அவற்றை பிறகு தான் பார்க்கவேண்டும். இப்போதைக்கு, அவற்றை தந்திரத்துக்கும், சுரண்டலுக்கும் உவமையாக பாவித்து, தற்கால இந்திய சூழ்நிலையில், அவரவர் போக்கில், இந்திய விடுதலையை போற்றி பாதுகாக்க, சிந்தனைகள் அருளுங்களேன்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 17:26, 16 ஆகஸ்ட் 2011 (UTC) |