அன்றொரு நாள்: ஆகஸ்ட் 14.2மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
1. ஆகஸ்ட் 14 1945 அன்று யாதொரு நிபந்தனையின்றி சரண். வேறு வழி? ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலின் கொடுமை தாங்கவில்லை. இரண்டாவது உலக யுத்தத்தின் முடிவு. வைரிகளுக்குள் பேச்சு வார்த்தை எப்படி? அதற்குத்தான் ஸ்விட்சர்லாந்து. நிரந்தர நடுநிலை நாடு. அவர்களின் கொள்கை, ‘நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காவிட்டால் சரி.’ ஜப்பானுக்கு ஆணை: ஜெனெரல் மக் ஆர்தரிடம் சரணடையவும். ராணுவ ஆவணங்களை அவரிடம் கொடுத்து விடவும். செப்டம்பர் 2, 1945 ஜப்பான் இவரிடம் சரணடைந்தது. ஜப்பானை சர்வாதிகாரியாகத்தான் அவரும் ஆண்டார். நல்லதும் செய்தார். பிடிவாதக்காரன். அவருக்கு ஆளுமை அளித்த அதே ட்ரூமனால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் விடுதலை தினம் ஆகஸ்ட் 14, 1947. வம்பு, தும்பு வேண்டாம் என்று பழங்கதைக்குப் போய்விட்டேன்.கிடைத்த வாலில்லாக்குரங்குகளில் தாடை எலும்பு தடயங்களின் வரலாறு 14 மிலியன் வருடங்களுக்கு முன்பாம். கிடைத்த கல் கோடாரிகளின் வயது 2 மிலியன் வருடங்களாம். சிந்துவெளி கலாச்சார சின்னங்கள் மொஹஞ்சதாராவில். ஷாஜஹான் காலத்து லாஹூர் அருகில் உள்ள கோட்டை, அதை சார்ந்த தோட்டங்கள்
உசாத்துணை: http://202.83.164.27/wps/portalhttp://www.heritage.gov.pk/html_Pages/culture.heri.html
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:12, 16 ஆகஸ்ட் 2011 (UTC) |
