வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பருப்பு உருண்டை மோர்க்குழம்பு

From மரபு விக்கி

Jump to: navigation, search

திருமதி. கீதா சாம்பசிவம்

மேற்சொன்ன முறையில் கடலைப்பருப்பை ஊற வைத்து மி.வத்தல் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதில் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவைக் கலந்து வைத்துக்கொள்ளவும். இவற்றைச் சின்ன எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும். உருண்டைகளைத் தனியாக வைக்கவும். இப்போ மோர்க்குழம்பு. கொஞ்சம் புளிப்பு இருக்கணும் மோரில். புளித்த மோர் கிடைக்கவில்லை என்றால் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்துக்கொண்டு மோர்க்குழம்புக்கு அரைக்கும் சாமான்களோடு ஊற வைத்து அரைத்துக் கலக்கலாம்.


மோர்க்குழம்புக்குத் தேவையான சாமான்கள்: மோர் சுமார் 100 மி.லி. கெட்டியாக இருந்தால் நல்லது. உப்பு, மஞ்சள் பொடி தேவையான அளவு.


கொத்துமல்லி விதை ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், து.பருப்பு ஒரு டீஸ்பூன், அரிசி ஒரு டீஸ்பூன் இவற்றை ஊற வைக்கவும். புளிக்காத மோரெனில் புளியையும் இவற்றோடு சேர்த்து ஊற வைக்கவும். அரை மூடித் தேங்காயைத் துருவிக்கொள்ளவும், அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் எடுத்துக்கொள்ளவும். இரண்டு பச்சை மிளகாய். எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொஞ்சம் பெருங்காயப் பொடியோடு மோரில் கலக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். தயாராய் இருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாய்ச் சேர்க்கவும், உருண்டைகள் மிதந்து வரும். கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம், கருகப்பிலை தாளிக்கவும், சாதம், சப்பாத்தி போன்றவற்றோடும், சேவை, கலந்த சாத வகைகள் போன்றவற்றோடும் சாப்பிடலாம்.

--Ksubashini 17:15, 18 மே 2010 (UTC)

Contributors

Ksubashini

This page was last modified on 18 May 2010, at 17:15. This page has been accessed 1,854 times.