வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 6

From மரபு விக்கி

Jump to: navigation, search

முனைவர்.க.சுபாஷிணி


தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் ஆறாவது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் ச.செல்வராஜ் அவர்களின் “ தமிழகக்கடற்கரை துரைமுகப்பட்டினங்களும் அகழாய்வுகளும்” என்ற கட்டுரை.

இக்கட்டுரை பண்டைய தமிழகத்தோடு கிரேக்கர்கள் ஏற்படுத்திக் கொண்ட வாணிகத்தொடர்பை விளக்கும் வகையில் தொடங்குகின்றது.

கி.பி.1ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ”பெரிப்ளூஸ் ஆஃப் எரித்திரியன் சீ” என்ற நூலிலும் பின்னர் பிளினி எழுதிய உயிரியல் நூலிலும், தாலமி எழுதிய பூகோள நூலிலும் தமிழகத்தின் கடல் வணிகம், துறைமுகங்கள் பற்றிய தகவல்கள் பல கிடைப்பதாக கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஆக, சங்க நூல்களில் காண்பது போலவே, அயல் நாட்டவர் நூற்களிலும் இக்குறிப்புக்கள் வருகின்றன என்ற செய்தியை இதன் வழி அறிய முடிகின்றது.

சங்ககால துறை முகங்களாக கீழ்க்காணும் பட்டினங்களை இக்கட்டுரை பட்டியலிடுகின்றது. வசவசமுத்திரம்
அரிக்கமேடு
மரக்காணம்
காரைக்காடு/குடிகாடு
காவிரிப்பூம்பட்டினம்
அழகன்குளம்
கொற்கை

இடைக்காலத் துறைமுகங்களாக கீழ்க்கண்பவை குறிப்பிடப்படுகின்றன பெரியபட்டணம்
நாகப்பட்டினம்

இந்த பட்டினங்களின் விளக்கங்களோடு அங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடப்படுவதும் இக்கட்டுரையின் சிறப்பாக அமைகின்றது.

சங்ககால துறைமுகங்கள் இன்று மறைந்தும் அழிந்தும் விட்டன. ஆனால் இந்தப் பகுதிகளில் விரிவான ஆய்வுகள் மென்மேலும் தொடரப்படும் போது பண்டைய கடல் வணிகம் தொடர்பான புதிய தகவல்கள் மேலும் கிடைக்க வாய்ப்புண்டு! --Ksubashini (பேச்சு) 10:33, 7 மார்ச் 2017 (GMT)

Contributors

Ksubashini

This page was last modified on 7 March 2017, at 10:33. This page has been accessed 2,137 times.