வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 10

From மரபு விக்கி

Jump to: navigation, search
வரலாற்றில் கோவிலூர்

பல நூற்றாண்டுகளுக்கு முன்:
கோவிலூரில் ஒரு சிவன் கோயில், மிகச் சிறு அளவில் காட்டுக்குள் செம்பூரான் கல்லில் இருந்தது.

கி.பி.
1761 சிருங்கேரி சங்கராச்சாரிய சுவாமிகள் வேதாந்த மரபில் வந்த உகந்த லிங்க ஞான தேசிக சுவாமிகள் அவதாரம்

1791 காரைக்குடியில் நகரத்தார் மரபில் ஆண்டவர் முக்திராமலிங்கம் அவதாரம்

1810 காரைக்குடி முக்திராமலிங்கம் பொருள் வைத்த சேரியில் உகந்த குரு சுவாமிகளிடம் வேதாந்த பாடம் பயின்று வாசிட்டம் வரை பாட சமாப்தி செய்தார்.

1818 கழனிவாசல் கொற்றவாள் ஈசுவரர்--திருநெல்லை நாயகி அம்மன் கோயிலை ஆண்டவர் கல் திருப்பணியாக்கினார்.  கோவிலைச் சுற்றி அமைந்துள்ள ஊருக்குக் கோவிலூர் என்று பெயர் வழங்குவதாயிற்று.  படம் நிறுவ அடிகோலப் பெற்று வேதாந்த நூல்களையும் ஞான வாசிட்டம் முதலியவற்றையும் கற்பிக்கத் தொடங்கினர்.

1819 உகந்தலிங்க சுவாமிகள் பரிபூரணம்

1819 உகந்த லிங்க சுவாமிகள் அதிஷ்டானம்::  ஈசான்ய ஞான தேசிக அதிஷ்டானம் மடம்.

1847 யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் தொடர்பு

1849 துறவு ஆண்டவர் பரிபூரணம்

1849 மூன்றாவது பட்டமாகக் கருணாநிதி சுவாமிகள் என்ற சிதம்பர இஅயா, சிதம்பர ஞான தேசிகர் என்னும் பெயருடன் அருள் ஆட்சி ஏற்றனர்.

1850 முத்துராமலிங்க ஆண்டவரை மகாலிங்க மூர்த்தியாகவும், துறவு ஆண்டவரை நந்தியாகவும் அமைத்து, இருவருக்கும் ஒன்றாய்க் கருவறை முதலியனவற்றைக் கருங்கல் திருப்பணியாக அமைத்து, கருணாநிதி சுவாமிகள் குடநீராட்டுச் செய்தனர்.

1850 மதுரையில் குட்டைய சுவாமிகள் படம் நிறுவப் பெற்றது.

1850 மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை கோவிலூர்ப் புராணம் பாடினார்கள்.

1858 சிதம்பரம் மூலட்டான ஈசுவரர் கோவிலில் சுவர்ணபந்தன மஹா கும்பாபிஷேஹம் செய்வித்தட்னு (காள யுக்தி--ஆனி 14)


1865 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணியை முடித்து, குடநீராட்டு விழாவைக் கருணாநிதி சுவாமிகள் நடத்தி வைத்தார்கள்.

1876 கருணாநிதி சுவாமிகள் பரிபூரணம்

1876 நான்காவது பட்டமாக இராமசாமி ஞான தேசிக சுவாமிகள் அருளாட்சி ஏற்றார்கள்.  அஷ்ட லெட்சுமி மண்டபமும், கோவிலைச் சுற்றிப் புதிதாகத் திஉர்மதிலும், கோவிலூரில் கட்டினார்கள்.

1883 இராமசாமி ஞான தேசிக சுவாமிகள் பரிபூரணம்

1883 ஐந்தாவது பட்டமாக, திருக்களர் ஆண்டவர் என்றுபெரும்புகழ் பெற்ற வீரப்ப சுவாமிகள் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் என்ற திருநாமத்துடன் கோவிலூரில் அருள் ஆட்சி ஏற்றார்கள்.

அடுத்த பத்து ஆண்டுகளில் கோவிலூர் விரிவடைந்தது.

1890 சிருங்கேரியில் கல் திருப்பணிகள்

1890--1910 திருக்களரில் கல் திருப்பணிகள்--திருக்களர் ஶ்ரீபாரிஜானவனேஸ்வரர் கும்பாபிஷேஹம்

1908 திருநெல்லை நாயகி அம்மனுடன் கூடிய கொற்றவாள் ஈசுவரர் கோயில் குட நீராட்டு விழா (கீலக சித்திரை 11)

1910 பொருள் வைத்த சேரியில் சொர்ணபுரீசுவரர் செளந்தரநாயகி அம்மன் கோவில் திருப்பணி (அந்நாளில்) ஒன்றேகால் லட்சம் ரூபாய்ச் செலவில் நிறைவேறியது.

1911 திருக்களர் ஆண்டவர் பரிபூரணம்.

1911 அண்ணாமலை ஞான தேசிகர் ஆறாவது பட்டமாக எழுந்தருளினார்கள்

1918 அண்ணாமலை ஞான தேசிகர் பரிபூரணம்

1918 ஏழாவது பட்டமாக மகாதேவ ஞான தேசிகர் அருளாட்சி ஏற்றார்கள்.

1927 செப்டம்பர் 11-இல் கோவிலூர் ஆதீனத்தைச் சேர்ந்த சிதம்பரம் கோ. சித. மடாலயத்துக்கு மகாத்மா காந்தியடிகள் வந்து இங்கு ஒருநாள் தங்கி  இருந்தார்கள். காந்தி மகானுக்கு மடாலயத்தின் சார்பில் பரஞ்சோதி சுவாமிகள் பணமுடிப்பும் வரவேற்பும் கொடுத்தார்கள்.

1929 ஏப்ரல் 6--ஆம் நாளில் கானாடுகாத்தான் சா.ராம.மு.அ. அண்ணாமலைச் செட்டியார் அவர்களுக்கு ஆங்கிலேய அரசாங்கத்தாரால் 'செட்டிநாட்டரசர்' என்ற பட்டம் வழங்கப் பெற்றமைக்கு நகரத்தார்கள் கோவிலூரில் பாராட்டு விழா நடத்தினார்கள்.

1929 நகரத்தார்களில் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு, பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் பணம் பெற்றுக் கொள்ளும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, திரு சொ. முருகப்பா அவர்களின் முயற்சியால் 96 ஊர்க்கூட்டம் கோவிலூரில் நடைபெற்றது.

1947 ஏழாவது பட்டம் மகாதேவ ஞான தேசிகர் பரிபூரணம், எட்டாவது பட்டமாக சோமசுந்தர ஞான தேசிகர் சுவாமிகள் அருளாட்சி ஏற்றார்கள்.

1948 எறும்பூரில் தத்துவராய சுவாமிகள் சமாதிக்கோயில் குடநீராட்டு விழா

1954 கோவிலூர் ஆதீனம், இந்து சமய அறநிலையத் துறையின் ஆட்சிக்கு உட்பட்டதில்லை என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது.

1961 பொருள் வைத்த சேரி செளந்தரிய நாயகி அம்மனுடன் கூடிய சொர்ணபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேஹம்

1969 ஶ்ரீகாசி முதலிய நகரச் சத்திரங்களின் நிர்வாகம் பர்மாவில் இருந்ததை மாற்றி இந்தியாவில் நிர்வாகச் சபை அமைக்க, கோவிலூரில் 96 ஊர்க்கூட்டம் நடைபெற்றது.

1971 சோமசுந்தர ஞானதேசிகர் பரிபூரணம்

1971 ஒன்பதாவது பட்டமாக இராமநாத ஞான தேசிகர் அருளாட்சி ஏற்றார்கள்.

1972 கோவிலூர் நுழைவாயில் முகப்புக் கோபுரங்கள் புதுப்பிக்கப்பெற்றன.  ஒரு லட்சம் ரூபாய் செலவில் மடம் புதுப்பிக்கப்பெற்றது.

1973 நகரத்தார்களின் திருமணம் முதலிய விசேடச் செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க, கோவிலூரில் 96 ஊர்க்கூட்டம் ஜூன் 16, 17 இரு நாட்களும் நடைபெற்றது.  இதையொட்டிக் குழிபிறை பெரி. சின்னக்கருப்பன் செட்டியார் அவர்கள் தலைமையில் நகரத்தார் மாநாடும் அப்போது பாங்க் ஆப் மதுரை சேர்மனாக இருந்த லெ.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இளைஞர் மாநாடும் கவியரசு கண்ணதாசன் அவர்கள் தலைமையில் கவியரங்கமும் நாட்டரசன் கோட்டை டாக்டர் மணிமேகலை மாதவன் அவர்கள் தலைமையில் மாதர் மாநாடும் நிகழ்ந்தன.

1974 திருப்புவனம் வேதாந்த மடாலயம் கோவிலூர் ஆதீனத்துடன் இணைக்கப்பெற்றது.

1975 இராமேசுவரம் நகரச் சத்திரத்திற்குப் புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்கக் கோவிலூரில் 96 ஊர்க்கூட்டம் நடைபெற்றது.

1976 காளையார் கோவில் மடாதிபதி ஶ்ரீ அரு. இராமநாத சுவாமிகள், கோவிலூர் ஆதீனத்தின் இளவரசாக நியமிக்கப் பெற்றார்கள்.

1977 ஆதீனகர்த்தர் ஶ்ரீ இராமநாத ஞான தேசிக சுவாமிகள் காசியாத்திரை மேற்கொண்டு, அலகாபாத்-பிரயாகைக்குக் கும்பமேளாவுக்கும் சென்று வந்தார்கள்.

1977 கோவிலூரில் சிவன் கோவில் திருப்பணி தொடங்கப்பெற்றது.

1977 காஞ்சி காமகோடி பீடம் புதுப்பெரியவர்கள் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் கோவிலூருக்கு வருகை

1977 கோவிலூரில் ஶ்ரீ சங்கர் குருகுலம் தொடங்கப் பெற்றது.

1978 கொற்றவாள் ஈசுவரர் திருநெல்லை நாயகி அம்மன் கோவில் குடநீராட்டு விழா

1982 ஒன்பதாம் பட்டம் --ஶ்ரீல ஶ்ரீ இராமநாத ஞான தேசிக சுவாமிகள் விதேக முக்தி--அரு. இராமநாத ஞான தேசிக சுவாமிகள் பட்டம் ஏற்றல்.

1986 பத்தாம் பட்டம் அரு. இராமநாத ஞான தேசிகர் முக்தி.  பதினோராம் பட்டம் காசி விசுவநாத சுவாமிகள் பட்டம் ஏற்றல்.

1995 பதினோராம் பட்டம் காசி விசுவநாத சுவாமி முக்தி--ஶ்ரீலஶ்ரீ நாச்சியப்ப ஞான தேசிகர் பட்டம் ஏற்றல்.

கோயிற்திருப்பணிகள்

1977 திருவண்ணாமலை--ஈசான்ய ஞான தேசிகர் கோவில் குடமுழுக்கு

2002 பொருள் வைத்தசேரி--ஶ்ரீ செளந்தரவல்லி உடனாய ஶ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

ஶ்ரீலஶ்ரீ உகந்தலிங்க ஞான தேசிகர் திருக்கோவில் குடமுழுக்கு

2003 மருதவனம் ஶ்ரீ மருதவரீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு

2004 திருக்களர் ஆண்டவர் திருக்கோவில் குடமுழுக்கு

2005 சிதம்பரம் ஶ்ரீமத் பொன்னம்பல சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு

2006 மேட்டுப்பாளையம் (திருவண்ணாமலை) ஶ்ரீமத் சபாபதி சுவாமிகள் திருக்கோவில் குடமுழுக்கு

2007 எறும்பூர் ஶ்ரீமத் தத்துவராய சுவாமிகள் திருக்கோவில் குடமுழுக்கு

நடைபெற்று வரும் திருப்பணிகள்

1. திருக்களர் ஶ்ரீ பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில் திருப்பணி

2. கோவிலூர் திருநெல்லை திருக்கோவில் திருப்பணி

3. ஶ்ரீ ஈசான்ய ஞானதேசிகர் திருக்கோவில் திருப்பணி


--Geetha Sambasivam (பேச்சு) 09:57, 22 ஜனவரி 2014 (GMT)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 22 January 2014, at 09:58. This page has been accessed 1,981 times.