வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கும்பாபிஷேஹம், குடமுழுக்கு விழா தொடர்ச்சி 2

From மரபு விக்கி

Jump to: navigation, search
Perumal.jpg

திருப்பணி முடிந்து குடமுழுக்குச் செய்யப்படத் தயாரான நிலையில் காட்சி அளிக்கும் மூலவர்.  குடமுழுக்கின் போது பாலாலயம் எடுப்பித்துக் கலசத்தில் ஆவிர்ப்பவித்திருந்த/ சேர்க்கப்பட்டிருந்த மூலவரின் புனித சக்தியை மீண்டும் கலசநீரால் அபிஷேஹம் செய்து விக்ரஹங்களில் ஆவாஹனம்/சேர்ப்பித்தல் செய்வார்கள்.  ஆகவே அது முடிந்த கோயில்களில் கருவறையையும், மூலவரையும் படம் பிடிக்க இயலாது.  இது அபிஷேஹம் செய்ய இரண்டு நாட்கள் இருக்கையில் எடுத்தபடம்.  முன்னால் காட்சி அளிப்பது அர்த்த மண்டபம்.  படியேறிச் சென்றால் கருவறை மண்டபமும், கருவறையும்.



Visvaksenar.JPG

கும்பாபிஷேஹம் செய்யும் முன்னர் பாலாலயத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டிருக்கும் இறை சக்திக்கு வழிபாடுகள் நடத்துவார்கள்.  அதற்கென யாகங்களும் நடைபெறும். அப்படி யாகம் நடைபெறும் முன்னர் முதலில் போடப்படும் விக்னேஸ்வர வழிபாட்டுக்கான அலங்காரம் இது.  சிவன் கோயிலில் விக்னேஸ்வர வழிபாடெனில் வைணவ கோயில்களில் விஷ்வக்சேனர் அல்லது சேனை முதலியார் என வழிபடுவார்கள்.  அவர்கள் வழிபடும் விநாயக ரூபத்தில் கொம்பில்லாத தும்பிக்கையுடன் கூடிய விநாயக உருவம் காணப்படும்.  இந்தக் கலசம் விஷ்வக்சேனர் வழிபாட்டுக்கெனத் தயார் நிலையில் உள்ள போது எடுக்கப்பட்டது.


















DSC00750methini.JPG


இது மேதினி பூஜை எனப்படும் பூமித்தாயை வழிபடும் முன்னர் எடுக்கப்பட்ட படம்.  வயலில் இருந்து கொண்டு வந்த மண்ணால் பெண் உருவத்தை உருவாக்கி அதற்குப் புடைவை கட்டிப் பூக்கள், நகைகளால் அலங்காரம் செய்து வயலில் விளைந்து வந்த தானியங்களையும், ஏர், கலப்பை, அரிவாள் போன்றவற்றையும் சுற்றிலும் வைத்து அவற்றுக்கும் எண்ணெய் தடவிப் பூக்களால் அலங்கரித்து வழிபாடுகள் நடைபெறும். பெரும்பாலும் இந்த மேதினி பூஜை கிராமக் கோயில்களிலேயே நடைபெறுகின்றன.  நகரங்களில் வயல் இல்லாமையாலும் மற்றக் காரணங்களை ஒட்டியும் நடைபெறுவதில்லை. 


















--Geetha Sambasivam 12:11, 12 நவம்பர் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 30 November 2011, at 19:55. This page has been accessed 2,525 times.