வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கதையே கவிதையாய்! 3.

From மரபு விக்கி

Jump to: navigation, search

கதையே கவிதையாய் !


                                                                                           
Kahlil-gibran--the-prophet.jpg



 கண்ணீரும் சிரிப்பும் !



நைல் நதிக்கரையில், சலனமில்லாத நீரோட்டத்தில், ஒரு கழுதைப்புலியும், முதலையும் சந்தித்துக் கொண்டது. இரண்டும் ஒன்றை ஒன்று நலம் விசாரித்தது.


கழுதைப்புலி முதலையைப் பார்த்து, “ தங்களின் நேரம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது ஐயா ?” என்றது.


பதிலாக அந்த முதலையும், “ மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நான் வேதனையாலும், வலியாலும் துடிக்கிறேன். ஆனால் மற்ற உயிரினங்களோ எப்பொழுதும், அதற்கென்ன நல்லாத்தான் முதலைக் கண்ணீர் வடிக்கிறது, என்கின்றன. இது மேலும் என்னை வேதனைப்படுத்துகிறது “, என்றது.


புலியோ, “ நீ, உன் வலியும், வேதனையும் பற்றிப் பேசுகிறாய். ஆனால் என் நிலையைப் பற்றி எண்ணிப்பார். இந்தப் பிரபஞ்ச அழகையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் கண்டு வியந்து போகிறேன். மகிழ்ச்சியின் எல்லையில் பளபளப்பான பகல் பொழுதைப் போல நானும் சிரிக்கிறேன். அதற்கும் இந்த காட்டுவாசிகள், இது கழுதைப் புலியின் சிரிப்பு என்றுதானே எகத்தாளமாகக் கூறுகிறார்கள்?”, என்றது.


சிரித்தாலும், அழுதாலும் சரியான புரிதல் இல்லையென்றால் வாழ்க்கையே நரகம்தானே..........



பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:03, 23 மார்ச் 2011 (UTC)


 

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 17 May 2011, at 12:14. This page has been accessed 2,659 times.