வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ஆதிகாமாட்சி திருக்கோவில்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 * அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோவில் - காஞ்சிபுரம்


                                                                                                       
T 500 1152.jpg


மூலவர் : ஆதிகாமாட்சி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு:

ஆதிகாமாட்சி சன்னதி முன்மண்டபத்தில் சக்தி லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இதை "அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர்.

பிரகாரத்தில் மடாலீஸ்வரர் லிங்கம், சப்தகன்னியர், நாகர், மகிஷாசுரமர்த்தினி உள்ளனர். அன்னபூரணியின் புடைப்புச் சிற்பமும் இருக்கிறது. ஒரு காலத்தில், மூலஸ்தானத்தில் இருந்த அம்பிகை, வீரியலட்சுமி என்ற பெயரில் தனி சன்னதியில் இருக்கிறாள்.

தலபெருமை:


பவுர்ணமி பூஜை:ஆதிகாமாட்சி பத்மாசனத்தில் தென்திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள். கைகளில் பாசம், அங்குசம் மற்றும் அன்ன கிண்ணம் உள்ளது. காலுக்கு கீழே மூன்று அசுரர்களின் தலை இருக்கிறது. சன்னதி முகப்பில் ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. காலையில் ஸ்ரீசக்ரத்திற்கு பூஜை செய்தபின்பே, அம்பிகைக்கு பூஜை செய்வர். பவுர்ணமி இரவில் அம்பிகைக்கு விசேஷ பூஜை நடக்கும். பக்தர்கள் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்து, தீபமேற்றி வழிபடுகிறார்கள். அம்பாள் சன்னதி முகப்பில் துவாரபாலகியர் மட்டும்தான் இருப்பர். இக்கோயிலில் முன்மண்டபத்தில் துவாரபாலகர்களும், அர்த்த மண்டபத்தில் துவார பாலகியரும் இருக்கின்றனர்.

திருமண வழிபாடு: ஆதிகாமாட்சி சன்னதி முன்மண்டபத்தில் சக்தி லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இதை "அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல வரன் அமைய, வெள்ளிக்கிழமை காலை 10.30- 12 மணிக்குள் (ராகு காலம்) சக்தி லிங்கத்திற்கும், ஆதிகாமாட்சிக்கும் அபிஷேகம் செய்து தீபமேற்றுகின்றனர். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையவும், திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்பு நைவேத்யம் செய்து வணங்குகின்றனர்.

மூன்றும் தரும் அம்பிகையர்:உற்சவ அம்பிகையுடன் சரஸ்வதி, மகாலட்சுமி இருக்கின்றனர். இவர்களை வணங்க கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம். அம்பாள் சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நர்த்தன கணபதி, மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராஹ்மி, துர்க்கை உள்ளனர்

தல வரலாறு:

அசுரர்கள் சிலர் தேவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தனர். அவர்கள் தங்களைக் காக்கும்படி பூலோகம் வந்து அம்பிகையை வேண்டி தவமிருந்தனர். அம்பிகை காளி வடிவம் எடுத்து அசுரர்களை சம்ஹாரம் செய்தாள். பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே எழுந்தருளினாள். போரிட்ட அம்பிகை உக்கிரமாக இருக்கவே, அவளைச் சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவள் "ஆதிகாமாட்சி' என்று பெயர் பெற்றாள். அம்பிகை காளி வடிவம் கொண்ட தலம் என்பதால் "காளி கோட்டம்' என்றும் பெயருண்டு.

சிறப்பம்சம்:


அதிசயத்தின் அடிப்படையில்: ஆதிகாமாட்சி சன்னதி முன்மண்டபத்தில் சக்தி லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இதை "அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர்.

திருவிழா:

நவராத்திரி விழா 13 நாள் கொண்டாடப்படுகிறது. முதல் 9 நாட்களும், அம்பிகை ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருவாள். 11ம் நாளில் அம்பிகைக்கு சந்தனக்காப்பிடப்படும். கடைசி நாளன்று அம்பிகை புஷ்ப பல்லக்கில் புறப்பாடாவாள்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி 8.30 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:56, 13 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மலர்.







Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 13 April 2011, at 12:10. This page has been accessed 3,877 times.