அன்றொரு நாள்: ஜூலை 17From மரபு விக்கிஅடிப்படை உரிமைகளை அரசியல் சாஸனங்களும், நாடாளுமன்றங்களும், நீதிமன்றங்களும் பல தடவை வலியுறுத்தி கோட்பாடுகளை வகுத்திருந்தும், அவை மீறப்படுவதை அடிக்கடி வெளிப்படையாகப் பார்க்கிறோம். தடுக்கத் திராணி இல்லாமல் தடுமாறுகிறோம். இனவெறியும், சமயவெறியும், நாடு கடந்து கொடுங்கோல் ஆட்சி செய்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததையும் வரலாறு பதிவு செய்து இருக்கிறது. அகில உலக நாடுகளின் சமுதாயங்கள் ஒன்று கூடி சாந்தி நிலவும் வரைமுறைகளை வகுக்கவேண்டும், அகில உலகிலும் நியாயமும் தார்மீகமும் சட்டரீதியாக நிலை நிறுத்தபடவேண்டும் என்ற சீரிய கருத்து கிட்டத்தட்ட நூறு வருடங்களாக உலா வந்தும், கிடப்பில் போடப்பட்டும் இருந்தது. ஜூலை 17, 1998 அன்று 120 நாடுகளின் பிரதிநிதிகள் ரோமாபுரியில் கூடி, கலந்தாலோசித்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைக்க முடிவு செய்தன. போனவருடம் கம்ப்பாலா நகரில், வருடம்தோறும், இந்த நாளை அகில உலக நியாய தினமாகக் கொண்டாடுவது என்று தீர்மானம் ஆயிற்று. பல வருட கோரிக்கையான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வந்த வரலாற்றை பற்றிய குறும்படமொன்று உகாண்டாவிலும், காங்கோவிலும், கொலம்பியாவிலும், சூடானிலும் நடந்த இனப்போர்களின் அட்டூழியத்தை உணர்ச்சிபூர்வமாக சித்தரித்து, புகழ் பெற்றது. ஹிட்லரின் நாஜிப்படைகள் யூதர்களை கொன்று குவித்த ‘ஹொலாகாஸ்டிலிருந்து’ இன்று வரை உலகின் பல பாகங்களில் நடந்த இனப்போர்களை பற்றி எழுதினால், ரத்தக்கண்ணீர் பெருகும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செவ்வனே இயங்கவேண்டும் என வேண்டுவோமாக.
இன்னம்பூரான் 17 07 2011
உசாத்துணை:
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 07:43, 18 ஜூலை 2011 (UTC)
|
