அன்றொரு நாள்: ஆகஸ்ட் 16From மரபு விக்கிஇன்னம்பூரான்
Godmen எனப்படும் ஆங்கில சொல்லை தமிழாக்கம் செய்வது மெத்த கடினம். இப்போதைக்கு ‘மனித தெய்வம்’ என்ற சொல்லை தற்காலிகமாக வைத்துகொள்வோம். சாமியார்கள், அருள் வாக்கு சொல்பவர்கள், சாமியாடி, கோடாங்கி, மடாதிபதிகள், த்ரிவேணி அக்காடா தடாலடி நாகர்கள், ஸ்டைல் ஸ்வாமிகள், துறவிகள் இவர்களெல்லாம் தமக்கு தெய்வ சம்பந்தம் இருப்பதாகத்தான் முழங்குகிறார்கள். அவர்கள் எல்லாம் ‘மனித தெய்வங்களா’? குபேரானந்தாக்களும், இந்திரானந்தாக்களும் நிறைந்த இந்த நன்னாட்டை மேற்கத்தியவர்கள் Godmen Country என்கிறார்கள். தூய ஆன்மீகம் பேசுவதற்கு ‘மனித தெய்வம்’ என்ற தகுதி தேவையே இல்லை. ஏன்? இறை என்ற சொல் கூட அத்யாவசியமல்ல. சில படிநிலைகளுக்கு மேல் சொற்களும், அவை கூறும் பொருட்களும், தெளிவுரைகளும், விரிவுரைகளும், விஸ்தாரங்களும் உறைந்து போய் விடுகின்றன. ஆனால், மனம் பேசும்; செவி உள்ளே. அங்கே தான் சூக்ஷ்மம்.
அவரை பற்றி ஒரு நாளில் சில வார்த்தைகளில் அள்ளி தெளித்து பேசுவது தவறு. ஆனால், குறிப்பால் உணர்த்தலாமே. எல்லாரும் வந்து எழுதுங்கள், திசை மாற்றாமல், ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் சன்னிதானத்தில் நிற்கிறோம் என்ற அமைதியுடன், அடியாராக, தோழமையுடன், சிசுபாவத்துடன், கன்யா லக்ஷ்மியாக. அடியேனும், இந்த இழையை மட்டும், ஒரு தொடராக அமைத்து, பகவான் ஆணையிடும்போதெல்லாம், அவருடைய பொன்மொழிகளை, அனுபவத்தை முன்வைத்து எழுதலாமா? ஏன் இந்த கேள்வி? கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னால், நான் மின் தமிழில் எழுதினது: ‘...தீடீரென்று என்றும் போகாத இடத்துக்கு போனால் ஸ்ரீ ராமகிருஷ்ணர், புதிய நூல் முகப்பிலிருந்து சிரிக்கிறார். சரி, என்று வீட்டுக்கு வந்த பிறகு, பல வருடங்களாக தொடாத புத்தக குவியலை நோண்டுகிறேன். பகவான், ஒரு பழைய புத்தகத்தின் முகத்திலிருந்து சிரிக்கிறார். கையில் ஆயிரம் பக்கங்களுக்கு விஷயம். சான்றோர்களின் துணை வேண்டுகிறேன்...’ அடுத்த படியாக: இந்த மெய்ஞான/விஞ்ஞான ஒவ்வாமை/முடிச்சுகள்/ ஒப்புமை எல்லாம் பலே பலே சர்ச்சைகள். அடுத்தவன் பெண்டு கழண்டு விடும்! ஸ்ரீ ராமகிருஷ்ணரை புரிந்து கொள்ள பொருத்தமான அறிமுகம்: ரொமைன் ரோலா என்ற ஃபிரன்ச் வேதாந்தி. இலக்கியத்திற்கு 1915ல் நோபல் பரிசு வாங்கியவர். அண்ணல் காந்தியின் அருமை நண்பர். அவர் சொல்கிறார்: “...ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஆன்மீக அனுபவங்கள் சாகரம் போன்றவை. எனக்கும் அந்த அனுபவம் கிட்டியது உண்டு. இந்த சாகரமானது சர்வமதசம்மதத்தின் உச்சகட்டம். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஆன்மீக அனுபவங்களில் ஒரு மாபெரும் பிரபஞ்ச ஒற்றுமையையும், காலத்திற்கெல்லாம் மேற்பட்ட நிலையையும் காண்கிறேன்...”
“ஒரு துரும்பானது ஒரு தரம் ஸ்பரிச வேதியினால் தங்கமாக மாற்றப்பட்டு விட்டால், அது
[இன்னம்புரான்
|
