ஒழிவிலாப் பார்வை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

category:  சைவ சித்தாந்தம்

ஒழிவிலாப் பார்வை


முனைவர் கி. லோகநாதன் 3-9-13


இறைவன் காட்டத்தான் உயிர்கள் காண்கின்றன.  இவ்வாறு காட்டி காட்டியே கண் விழிப்பித்து இதுவரைக் காணாததையெல்லாம் கண்டு ஞானம் பெற்று உயிர்கள் வளரந்திட இறைவன் சிவசத்தியாக எழுந்து அயராது ஞானக் கூத்து உதைக்கொண்டே ஆனந்ததாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கின்றான்

 

தமிழர்களின் மிகத் தொன்மையான சுமேரு காலத்திலிருந்தே வரும் இந்தக் கோட்பாட்டை எப்படி உண்மை என்று  மெய்யறிவு விதிகள் பிழையாது காட்டுவது? என்பதே இப்பொழுது நமது தேவையாக இருக்கின்றது. ஆன்மாக்கள் மூர்ச்சை போன்ற நிலைகளில் இறைவனது காட்டு இருந்தும் உடம்பில்  தக்கக் கருவிகள் செயல்படாது போக ஒடுங்கிக் கிடக்க அந்த உடம்பில் இன்னும் வாழும் ஆன்மாக்கள காணாது கிடக்கின்றன என்பதே மெய்கண்டாரின் விளக்கம்

 

இந்த காட்டுதல்-காணுதல் எனும் ஞானக் கூத்தாட்டம் உண்மையே பொய்யல என்பதை தத்துவார்த்த முறையில் நான் பல கட்டுரைகளில் பலவாறு விளக்கியுள்ள போதிலும் இங்கு கீழே வரும் ஓர் தத்துவக் கவிதைக்கு பொருள் தரும் வகையில் இதனை விளக்க முயல்கின்றேன்

 

இங்கு ‘ஒழிவிலாப் பார்வை’ என்பது யாண்டும் எங்கும் இருந்துகொண்டே ஒழியாது ஒடுங்காது உளதாகிக் கொண்டே இருக்கும் பார்வை, ஆகவே இறைவனது பார்வை. இறைவனை ஓர் கண்ணாகவே காணும் திறத்தோடு இது வருகின்றது. இதனைத் தான் மெய்கண்டார் ‘நோக்காது நோக்கல்” என்றும் கூறியுள்ளார்

 

 

 

'571:  'ஒழிவிலாப் பார்வை

மாறி மாறி வரும் மாய விளையாட்டுகள்
நடுவே
மாறா திருக்கின்றாய்  மாயா நன்னாட்டில்
மாயம் யாதுமில்லா
மன்னும் பேருண்மையாய்!

 

இது பொதுவாகிய ஓர் உலக உணமை. எல்லா உயிர்களின் உலகியல் அனுபவங்கள் அனைத்தும் மாறி மாறியே வருபவை என்பதொடு, அவை உயிர்களின் ஆட்சிக்கு அப்பாற்ப்பட்டு நடப்பதுபோன்ற உணர்வினையும் தர, அவை எல்லாம் ஓர் மாய விளையாட்டாகவே காண வருகின்றன. இதனால் பரந்து விரிந்த இந்த பிரபஞ்சமே, பேரண்டமே ஓர் மாய நன்னாடாகவும் படுகின்றது. திருமூலர் இறைவனை ‘மாய நன்னாடன்’ என்று கூறுவதைக் காண்க

 

'நிலைத்து நில்லாது யாண்டும் எல்லாமே மாறிக்கொண்டே வர, அதனை எல்லாம் ஓர்ந்து இதன் காரணமாக ஆதிமுதலாக மூலமாக யாண்டும் மாறாது மாயங்கள் யாதுமிலாது மன்னும் பேருணமையாய் ஓர் பொருள் இருக்க வேண்டுமே? என்ற எண்ணம் எழ அது பொழுது மாறி மாறி வரும் இப்பேரண்டத்தில் மாறா வரும் பேருண்மையாய் இறைவன் இருக்கின்றான என்ற உணர்வு எழ ஒருவாறு இறைவன் உண்டுபோலும் என்ற ஆஸ்த்திக எண்ணமும் எழுகின்றது

மாய விளையாட்டில் மாட்டிக் கொண்டு
மகிழ்ந்த போதெல்லாம்
சிந்தித்து சிந்தித்துத் தெளிந்தேன்
செப்பரும் உண்மைகள் இந்த
செகச்சால வித்தைகள் ஊடே
சுடர்விடும் சோதியாய்'!

 

இந்த மாய விளையாட்டுகளில் மாட்டிக்கொண்டு காண்பது மெய்யோ? பொய்யோ? என்றெல்லாம் கேட்டுக் கேட்டு இப்படியும் அப்படியுமாக பலவாறு சிந்தித்துச் சிந்தித்துச் செல்ல, திடுமென அகத்திருந்து உள்ளொளிப் பரவ உடன் ‘உணமைதான், பொய்யல” என்ற உணர்வு உதிக்க ஆன்மா பல செகச்சால வித்தைகள் ஊடே காண்பதெல்லாம் பொய்யல்ல, இந்த உலகம் ஓர் மித்தை அல்ல, அழியாத் உண்மைகளும் உண்டு அவை அகத்தே நின்று தூய சோதியாய் தெள்ளிய ஞானமாய் சுடர்விட, மனதில் அசைக்கமுடியாத ஓர் உறுதியும் பிறக்கின்றது

 

 Descartes  என்ற பரங்கி ஞானி இந்த உணர்வை ‘ apodeitic certainty’  என்று கூறி இதுவே உன்மையின் இலக்கணம் என்றும் கூறுவார். உண்மைக்கு நையாயிகர் கூறுவதுபோல பிரதியட்சம் அனுமானம் ஆகமம் போன்ற அளவைகள் யாதுமில்லை.  ஓர் உண்மை தன்னுளிருந்து தானே தன்னை ஓர் உண்மை என உணர்த்திவிடும்  ஒளிச்சுடர் ஒன்று தன்னை ஒளி என்று காட்டிக்கொள்ள வேறொரு ஒளிச்சுடரைக் கொண்டுவரத் தேவை இல்லை,

 

ஆயினும் அசைக்க முடியா உறுதியுடன் ‘இது உண்மைதான் பொய்யல’ என்ற உணர்வு எப்படி உதிக்கின்றது? உயிரைக் கவ்வி ஞானச்சுடர் விளக்கேற்றி வைக்கின்றது?

 

 

உண்மை எனும் உணர்வு எப்படி உற்பவிக்கின்றது அதுவும் அசைக்கமுடியா உறுதியுடன் என்ற கேள்வி எழும்போது, அதன் விளக்கமாக எழுவதே இறைவன் காட்ட நாம் காண்கின்றோம் என்றும் எப்பொழுது இறைவன் காட்டுவது போல ஓர் ஆன்மாக் காண அதுபொழுது ஓர் பின்னூட்டமாக அமைவதே “உண்மை’ எனும் உணர்வு என்ற விளக்கமும் கிடைக்கின்றது.

 

ஓர் ஆசிரியர் ஓர் மாணவனுக்கு ஒன்றை போதிக்க, அந்த மாணவன் ஆசிரியர் போதித்தவாறு கண்டுகொள்ள, உடன் ஆசிரியர், சரியாக்ப் புரிந்துகொண்டாய் என்று பின்னூட்டம் தந்து அடுத்த படிக்குப் பெயர்கின்றார்.

 

அதுபோலத்தான் இறைவனும் போதிக்கின்றான் என்கின்றது இக்கவிதை கீழ் வரும் வரிகளில்

 


'அப்பாலுக் கப்பால் நின்றவா
ஆடும் பெருந்தகையை
இப்பால் இருக்கும் நான்
எளிதில் அடைய இயற்றுகின்றான்
பற்பல படிகளாய் என் பார்வையில்
சுட்டு யாதுமில்லா
சுடர் ஞானம் விளங்க'!

 

தனக்கென எவ்வுருவும் இல்லாத இறைவன், கூத்தப் பிரான் வடிவெடுத்து அப்பாலுக்கு அப்பால அனைதத்தையும் கடந்து நின்றவாறு இந்த உலகமே அசைந்து அசைந்து பல மாற்றங்கள் அடையுமாறு அம்மையோடு இணைந்து ஆடிக்கொண்டே இருக்கின்றான்.  ஏன் இவ்வாறு ? என, இவ்வுலகில் இப்பால் ஒர் உடலெடுத்து சாதரண முறையில் சுட்டுணர்வுடனேயே ஆகவே சுட்டுப்பார்வையுடனேயே இருக்கும் என்னைப் போன்ற ஆன்மாக்கள் சுட்டு யாதுமில்லா சுடர்ஞானமாகிய சிவஞானம் மகிழ் என்றவாறு இறைவன் ஆடுகின்றான். அதுவும் எப்படி எனில் ஒரே முறையில் இல்லாது படிப்படியாக சோபான முறையில் உயரும் வகையில்

 

இதுதான் திருமூலர் போற்றும்” கண் விழிப்பித்தல்” ஆகும். யான் இதனை எனது அழிவிலுண்மை எனும் பெருநூலில் மிக விரிவாக விளக்கியுள்ளேன். பார்வைகள் பொறிலியப் பார்வை தொடங்கி நூலியப் பார்வை நுதலியப் பார்வை பரப்பார்வை சிவப்பார்வை அதீதப் பார்வை காலாதீதப் பார்வை என்றெல்லாம் உயர்ந்து ஞானம் மகிழ்ந்து முடிவில் பார்வையற்ற பார்வையாகிய சுட்டு யாதுமில்லா பார்வையை மகிழத் தருகின்றான் என்றவாறு

 

இறைவன் காட்ட உயிர்கள் காட்டியவாறே காண உண்மையெனும் உணர்வு தலைப்பட்டு மெய்ஞானம் தேற்றி இப்படி உயர்ந்து முடிவில் சிவஞானமே மகிழத் தரும் வீடு பேற்றையே மகிழத் தரும்  சுட்டு யாதுமில்லா பார்வையற்ற பார்வையை மகிழ்வது கூடி வருகின்றது என்றவாறு

 

 

'ஆய பல கலைகள் ஆழ ஆழ
அசத்தே அமைவதெல்லாம் என்றறிந்து
வீசி எறிந்துவிட்டு விழைகின்றேன்
ஓசைகள் ஊடே ஒளிந்திருக்கும் இறைவனை
ஓங்காரக் கண் கொண்டு பார்க்க'!

 

'எங்கே அறிவு சுட்டறிவாகவே இருக்கின்றதோ, அங்கு அறிவும் அசத்தாகவே இருக்கும். அசத்து என்றால் பொய் என்பதல்ல, மாறாது என்றும் ஒரே படித்தாய் இருக்கும் ஒன்றல்ல என்றவாறு. பலவகையான கலைகள் வழியாக ஈட்டப்படும் அறிவெல்லாம் சுட்டோடு வரும் அறிவுகளாகவே ஆகவே அசத்தவே இருக்க, சுட்டு இல்லாத சுடர்ஞானமாகிய சிவஞானமே வேண்டப்படுவது என்றவாறு, கலைஞானங்கள் எல்லாம் ஞானம் கைவந்த ஒருவனால் வேண்டாவென ஒதுக்கப்படும் என்றவாறு. இனி மந்திரங்களே அவற்றால் எழும் அக்கரசகக்ரங்களே எல்லாவகை கலைஞானங்களை சுட்டறிவுகளை எழுப்புவதென்றுத் தெளிய அவற்றையும் விட்டுவிட்டு கடந்து எல்லா மந்திரங்களுக்கும் மூலமாகிய ஓங்காரத்தையே ஆன்மா நாடும் என்றவாறு.

-

'பாய்ந்தலையும்மனம்பட்டுவிழ
பரிதவிப்புயாதுமின்றிபார்க்கின்றேன்--Ulagankmy (பேச்சு) 08:27, 3 செப்டெம்பர் 2013 (CDT)
பக்கத்துநின்றவாஎனைப்
பார்த்துப்பார்த்துஆடியவா
ஒக்கநின்றானைதன்னோடு
ஒத்துப்போமாஎன்னை
ஒடிவின்றிஓச்சினாணைஎன்
உள்ளத்தில்உள்ளமாய்நின்றானை
ஒழிவிலாஓர்பார்வையொடு
என்பார்வையில்
ஒன்றிநின்றானை'
!


 

ஒங்காரதில் ஒடுங்கிட, அங்கு பல அற்புதங்கள் நிகழ்கின்றன. பரிதவிப்பு படபடப்பு போன்றவை இல்லாதுபோகின்றன. ஆன்மா ஒங்கார சொரூபமாக நிற்கும் இறைவனோடு தானும் ஒன்றித்து நிற்கின்றோம் என்ற உண்மை உணர்வாக இதுபோன்ற மனவுறுதிகள் பிறக்கின்றன. மேலும் பல பிரபஞ்ச சூக்குமங்கள் தெளிவாகின்றன. ஆன்மாக்களோடு அவையேத் தானாக நின்றும் ஆன்மாக்களின் கண்ணோடு கண்ணான நின்று, ஆன்மாக்கள் எதைக் காண்கின்ற்னவோ அதையேக் கண்டு எவ்வாறு காண்கின்றவோ அவ்வாறேக் கண்டு, அடுத்த பக்குவ நிலைக்கும் பெயர, அதுவரை காணாததைக் காணுமா புதியப் பார்வைகளை இறைவன் அருளுகின்றான. அதுபொழுது உண்மை என்றும் பொய் என்றும் பின்னூட்டங்களைத் தந்து தன்னோடு பிறழாது ஒத்துப் போமாறும் செய்கின்றான. இவ்வாறு செய்து செய்து ஆன்மாக்களை ஞான வாழ்க்கையில் உயர்ந்து உயர்ந்து செல்லுமா ஊக்கி முடிவான வீடுபேறு எனும் முத்தி நிலைக்கு அழைத்துச் செல்கின்றான்

 

இப்படிப்பட்ட இறைவனது பார்வை என்றும் அழியாத எவ்வித சுட்டும் இல்லாது ஆகவே ஒழிவில்லாப் பார்வையாகும். ஆன்மாக்களின் பார்வவையோடு பார்வையாக இப்பார்வயோடு உடன் நின்று ஆன்மாக்களை உள்லவாக் கண்டு அடுத்டு உயர்ந்துசெல்ல யாதைக் காட்டவேண்டுமோ அதனைக் காட்டி கண் விழிப்பித்து முடிவில் வீடுபேறு மகிழத் தரும் சுட்டு யாதுமில்லாத பார்வையற்ற பார்வை மகிழும் முடிவான நிலைக்கு அழைத்டுச் செல்கின்றான்

 

ஆகா நாம் அனுபவிக்கும் ‘உண்மை’ எமும் மெய்யுணர்வில் அடங்கிக் கிடக்கின்றது இறைவன் காட்டத்தான் உயிர்கள் காண்கின்றன என்பது.

 

இதனை இன்னும் விரிவாக் ஆழ்மாக அறிய விரும்புவோர் காண்க எனது ‘அழிவில் உண்மை; 27ஆம் சூத்திஅம். கீழ் வரும் சுட்டியில் அது கிடைக்கும்:

 

https://sites.google.com/site/ulagansbooks/azivil-unmai-tamil-arum/e3-sutra-27

 

பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=ஒழிவிலாப்_பார்வை&oldid=12415" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 6 செப்டெம்பர் 2013, 04:08 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,057 முறைகள் அணுகப்பட்டது.