உடைகள்
1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்
ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,
பொருள்:-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட அவரும் அதே நிலைமையில் இருப்பது
2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம்
பொருள்:-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்
அவை நீண்டநாட்கள் இருக்கும்
3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை
பொருள்:-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்
ஒரு சேலையின் தரத்தினை அதன நூலினைக்கொண்டு ம்திப்பார்கள்
4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
பொருள்:-செட்டிமார்கள் எவ்வளவு வறுமை வந்தாலும்,தங்கள் இயலாமையை
வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத் துணியானது கிழிந்தாலும்,தன
தன்மையையை விடாது
சாரதா சுப்பிரமணியம் தேதி - 06/04/2011.