அன்றொரு நாள்: ஜூலை 25:Iமரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
ஒரு சமயம், என்னுடன் ஒரு மாடர்ன் மடிசஞ்சி பயணித்தார். கட்டுச்சாதம், திருநீற்றுக்கீற்று, ஜபதபம், சின்ன வயசு. அவர் ஒரு உலகம் சுற்றும் வயலின் வித்துவான். டைட் ஷெட்யூல். இன்னிக்கி அமெரிக்கா, நாளைக்கு ஆஸ்ட் ரேலியா. அவரிடமிருந்து தெரிந்து கொண்டதில் சிலவற்றையும் இங்கு அசை போடுகிறேன். கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். இசை கலைஞர்களுக்கு பலமான உபசாரம் போனஸ். எனக்கு தெரிஞ்ச வீட்டில், உமையாள்புரம் விருந்தினர். அகத்துக்காரரிடம், சாப்பாட்டைப்பற்றி ஒரு வார்த்தை கேட்காத மாமி, இவருக்கு பிடிச்ச சமையலை, ரகஸ்யமாக விசாரித்து, செய்து, மகிழ்கிறார்! இது நிற்க. பல்லடம், நீடாமங்கலம்,கும்பகோணம், ஹரிகேசவ நல்லூர், திருவிடைமருதூர்,தேவக்கோட்டை,கோனேரிராஜபுரம், பழனி, பூதலூர், மன்னார்குடி, சிதம்பரம், கீரனூர், திருப்பாம்புரம், திருவிழிமழலை, முசிரி, அரியக்குடி, செம்பை, மஹாராஜபுரம், செம்மங்குடி, மதுரை, உமையாள்புரம், லால்குடி, நெய்வேலி என்று சொந்த மண்ணின் வாஸனா/வாசனை இருந்தாத்தான், இசையின் மணம் விரவி, பெருகி, பரவி, நிறைந்து, வீசும் போல இருக்கிறது. அப்போது, பேரு இரண்டாம் பக்ஷம் தான். இவாள் எல்லாம் ஜாம்பவான்கள் என்றாலும், ஓரிரண்டு தலைமுறைகள் முன்னாலே, ஸீனியர் ஜாம்பவான்கள் இருந்திருக்கிறார்கள். சொல்லப்போனா, இப்போது டி.எம்.கிருஷ்ணா, உன்னிகிருஷ்ணன் எல்லாருமே ஜூனியர் ஜாம்பவான்கள் தான். இத்தனை பீடிகை எதற்கு என்றால், தீர்காயுசு என்ற வரன் பெற்று, சங்கீதபரம்பரையை போற்றி வளர்த்து, 90 வயதிலும் இசைக்கச்சேரி செய்த மஹா ராஜ ராஜ. ஶ்ரீ. பத்மவிபூஷண். சங்கீத கலாநிதி. செம்மங்குடி ஶ்ரீனிவாசய்யர் அவர்களின் ஜன்மதினம், இன்று. ஜூலை 25, 1908. ஆயுசு பரியந்தம் இசை உலகில் கொடி கட்டி பறந்து, மற்ற சிஷ்யகோடிகளின் பட்டங்களையும் ஆகாசத்திலே மிதக்கவிட்ட குருநாதர் இவர். பிரதான சிஷ்யை எம்.எஸ்.சுப்புலைக்ஷ்மி அவர்கள். மறைந்த தினம்:அக்டோபர், 31, 2003.
கொடுப்பினை என்று பார்க்கப்போனால், அது பார்யாள் தாயாரம்மாள். அவளது நிர்வாஹம், இவருக்குக் கிடைத்த போனஸ். http://www.musicplug.in/movie_pic/semmangudi-srinivasa-iyer4.jpg
இன்னம்பூரான் 25 07 2011 உசாத்துணை
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:07, 28 ஜூலை 2011 (UTC) |
